பதிவு செய்த நாள்
09 டிச2016
04:32
புதுடில்லி:ராயல் என்பீல்டு, நடுத்தர அளவிலான இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது. ராயல் என்பீல்டு, இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இந்தியாவுக்கு வெளியில், லண்டன், பாரிஸ், பார்சிலோனா, மேட்ரிட், வேலன்சியா, துபாய், ஜகர்தா, பேங்காக் ஆகிய இடங்களில், பிரத்யேக கடைகளை அமைத்துள்ளது. சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த கடைகளில், ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், அந்நிறுவனம், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள, மெல்போர்ன் நகரிலும், தற்போது பிரத்யேக கடை துவக்கியுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், எங்கள் நிறுவனம், 25 டீலர்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, 250 சி.சி., – 750 சி.சி., திறனுடைய பைக்குகளின் விற்பனைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ராயல் என்பீல்டுக்கு, ஆஸ்திரேலியா, முக்கிய சந்தையாக உருவெடுத்து வருகிறது. எனவே, அங்கு, பிரத்யேக கடையை துவக்கியுள்ளோம். தொடர்ந்து, அந்நாட்டின் மற்ற நகரங்களிலும், புதிய கடைகள் துவக்கப்படும். இந்த கடைகளில் எங்கள் பைக்குகள் மட்டுமின்றி, உதிரி பாகங்கள், இதர அலங்கார பொருட்கள், வாகன ஓட்டிக்கு தேவையான ஆடை உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|