பதிவு செய்த நாள்
10 டிச2016
05:01
போபால்:மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை சரிவடைந்துள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா, கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு, கடந்த மாதம், செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 30 சதவீதம் வரை குறைந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ராமன் குமார் சர்மா கூறியதாவது:மத்திய அரசு, கடந்த மாதம் பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டது. இதனால், கார்கள் விற்பனை, 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த பிரச்னை விரைவில் தீர்ந்து, இயல்பு நிலை திரும்பும் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். கடந்த நிதியாண்டில், எங்கள் நிறுவனம், 1.92 லட்சம் கார்களை விற்பனை செய்தது. நடப்பு நிதியாண்டில், இதுவரை, ஒரு லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது.
இருப்பினும், நடப்பு முழு நிதியாண்டில், கடந்த ஆண்டு எண்ணிக்கைக்கு இணையாக கார்கள் விற்பனை இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். மேலும், சுற்றுச்சூழல் பிரச்னையால், டீசல் கார்கள் விற்பனை குறைந்து வருகிறது. அதே சமயம் இரு சக்கர வாகன விற்பனை அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|