பதிவு செய்த நாள்
11 டிச2016
03:23
புதுடில்லி;‘‘டாடா மோட்டார்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ப புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தாமல் உள்ளதால், பாதிப்பு ஏற்படும்,’’ என, அந்நிறுவனத்தின் இயக்குனர், சைரஸ் மிஸ்திரி எச்சரித்து உள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின், சிறப்பு பொதுக்குழு கூட்டம், 22ம் தேதி, நடைபெற உள்ளது. அதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரி நீக்கப்படுவார் என, தெரிகிறது.இக்கூட்டத்தில், தனக்கு ஆதரவு தருமாறுக் கோரி, சைரஸ் மிஸ்திரி, பங்கு முதலீட்டாளர்களுக்கு கடிதம் அனுப்பிஉள்ளார்.
அதன் விபரம்:டாடா மோட்டார்ஸ், பாரம்பரிய கார்களையே தயாரிக்கிறது. தரம் மற்றும் சேவைகள் தொடர்பான பிரச்னைகளும் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், ஐந்து பன்னாட்டு நிறுவனங்கள், 50க்கும் மேற்பட்ட புதிய கார்களை அறிமுகப்படுத்தி உள்ளன. ஆனால், டாடா மோட்டர்ஸ், ‘போல்ட், ஜெஸ்ட்’ என்ற, இரு புதிய கார்களை மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது. ‘மான்ஸா, விஸ்டா, சபாரி ஸ்டார்ம்’ ஆகியவை, பழைய மாடல்களின்
மேம்பட்ட வடிவங்களே.நாம், இன்னும் பாரம்பரியமான கார்களையே தயாரித்து வருகிறோம். அவற்றுக்கு ஏராளமான சலுகைகள் வழங்குவதால், வருவாய் பாதிக்கப்பட்டு, சந்தை பங்களிப்பும், பிராண்டு மதிப்பும் குறைந்து வருகிறது. பிரிட்டனில், ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தயாரிப்பில், பிரச்னைகள் உள்ளன; அதே சமயம், ஏராளமான வர்த்தக வாய்ப்புகளும் உள்ளன.இத்தகைய சூழலில், டாடா மோட்டார்ஸ், புதிய, மேம்பட்ட தொழில்நுட்பத்தில் கார்களை தயாரிக்க வேண்டும். நிறுவனத்திற்கு, பல சவால்கள் காத்திருக்கின்றன. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, அந்நிறு வனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|