செயல்­ப­டாத நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை1.38 லட்­ச­மாக குறைந்­துள்­ளதுசெயல்­ப­டாத நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை1.38 லட்­ச­மாக குறைந்­துள்­ளது ...  'மொபைல் வாலெட்' பாது­காப்பில் கவனம் 'மொபைல் வாலெட்' பாது­காப்பில் கவனம் ...
கென்யா வழி காட்­டு­கி­றது:வளரும் நாடு­களில் வறுமை ஒழிப்­புக்கு மொபைல் போன் பண பரி­வர்த்­தனை உதவும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2016
03:31

பாஸ்டன்:‘மொபைல் போன் மூலம் மேற்­கொள்­ளப்­படும் பணப் பரி­வர்த்­த­னை­களால், வளரும் நாடு­களில், வறுமை கோட்­டிற்கு கீழ் உள்ள மக்­களின் நிலை மேம்­படும்’ என, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது. அமெ­ரிக்­காவில் வசிக்கும், இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்­தவர், தவ்னீத் சூரி; மாச­சூசெட்ஸ் தொழில்­நுட்ப மையத்தில், உதவி பேரா­சி­ரி­ய­ராக உள்ளார். இவர், ஜார்ஜ் டவுன் பல்­க­லையின், பொரு­ளா­தார நிபுணர் வில்­லியம் ஜாக் உடன் இணைந்து, ஆப்­ரிக்க நாடான கென்­யாவில், மொபைல் போன் பணப் பரி­வர்த்­தனை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளி­யிட்டு உள்ளார்.
அதன் விபரம்:கென்­யாவில், 2007ல், ‘எம் – பெசா’ என்ற, மொபைல் போன் வாயி­லான பணப் பரி­வர்த்­தனை சேவை துவங்­கப்­பட்­டது. மொபைல் போனில் பணத்தை சேமித்து வைக்­கவும், பொருட்கள் வாங்­கவும், நுண்­கடன் நிறு­வ­னங்­க­ளிடம், விவ­சாயம், சிறு வியா­பாரம் போன்­ற­வற்­றுக்கு, குறைந்த வட்­டியில் கடன் வாங்­கவும், கடனை திரும்பச் செலுத்­தவும், எம் – பெசா உத­வு­கி­றது.
செலவினம்
கடந்த, 2008 முதல், இச்­சே­வையை பயன்­ப­டுத்­திய வகையில், கென்­யாவில், வறுமை கோட்­டிற்கு கீழ் உள்ள, 1.94 லட்சம் பேர் அல்­லது 2 சத­வீத குடும்­பங்­களின், அன்­றாட தனி­நபர் செல­வினம் உயர்ந்­துள்­ளது. அவர்கள், வறு­மையில் இருந்து மீண்­டுள்­ளனர்.ஒரு நாளைக்கு, 1.25 டால­ருக்கும் குறை­வான செலவில், வாழ்­வோரை, வறுமை கோட்­டிற்கு கீழ் உள்ளோர் என, உலக வங்கி வரை­யறை செய்­துள்­ளது.
அத­ன­டிப்­ப­டையில், ஆய்வில் பங்­கேற்­றோரின், அன்­றாட தனி­நபர் செல­வினம், 2.50 டால­ராக உயர்ந்­துள்­ளது.எம் – பெசா, முக­வர்கள் அதிகம் உள்ள பகு­தி­களைச் சேர்ந்த, குடும்­பத்­தி­னரின் அன்­றாட தனி­நபர் செல­வினம் அதி­க­ரித்து உள்­ளது. இந்த முக­வர்கள், வாடிக்­கை­யா­ளர்கள் பணப் பரி­வர்த்­தனை சேவையை பெறு­வ­தற்கு பால­மாக விளங்­கு­கின்­றனர்.
ஒரு பகு­தியில், ஐந்து முக­வர்கள் அதி­க­ரிக்கும் போது, அங்கு வசிக்கும் குடும்­பங்­களின் தனி­நபர் செல­வினம், சரா­ச­ரி­யாக, 6 சத­வீதம் உயர்ந்­தி­ருப்­பது, ஆய்வில் தெரிய வந்­துள்­ளது.
பெண்கள்
ஆண் தலை­மையில் உள்ள குடும்­பத்தை விட, பெண் தலை­மையில் உள்ள குடும்­பத்தின், செல­வ­ழிப்பு திறன் அதி­க­மாக உள்­ளது. அதிலும், பெண்­களில் பெரும்­பா­லானோர், வியக்­கத்­தக்க வகையில், பண்ணை சார்ந்த தொழில்­களில் இருந்து, புதிய வியா­பா­ரத்­திற்கு மாறி­யுள்­ளனர். வறட்சி, வெள்ளம், நோய், வேலை­யின்மை உள்­ளிட்ட இடர்­பா­டு­களை சமா­ளிக்க, மொபைல் போன் பணப் பரி­வர்த்­தனை சேவை உதவும் என, ஏற்­க­னவே தெரி­வித்­துள்ளோம்.

அத்­த­கைய சேவை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்தால், நீண்­ட­ கால அளவில் வறு­மையை ஒழிக்­கலாம் எனக் கூறி­யதை, யாரும் புரிந்து கொள்­ள­வில்லை. முதன்­மு­த­லாக மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு, அதை புரிய வைக்கும் என, நம்­பு­கிறோம். நிதியை, சிறந்த முறையில் நிர்­வ­கிக்­கவும், குறிப்­பாக, பெண்கள், ஆண்­களை சார்ந்­தி­ராமல், தனிப்­பட்ட சேமிப்­பு­களை மேற்­கொள்­ளவும், எம் – பெசா உத­வி­யதால், வறுமை ஒழிப்பு சாத்­தி­ய­மாகி இருக்­கலாம் என, ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)