பதிவு செய்த நாள்
25 டிச2016
00:43
புதுடில்லி:மாருதி சுசூகி கார்கள் வாங்குவதற்காக, முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை, இந்த மாதம் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில், கார் உற்பத்தி, விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா முன்னணியில் உள்ளது. மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பால், கடந்த நவம்பரில், மாருதி கார் முன்பதிவு, 20 சதவீதம் குறைந்தது. இந்நிலையில், தற்போது, மாருதி கார் வேண்டி, பதிவு செய்வோர் எண்ணிக்கை, 7 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இது குறித்து, மாருதி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டு, அக்., – நவ., மாதங்களை விட, நடப்பாண்டு, அதே மாதங்களில், மாருதி கார்கள் விற்பனை, 6 – 7 சதவீதம் அதிகரித்து உள்ளது. செல்லாத நோட்டு அறிவிப்பு திடீரென வந்ததால், மக்களிடையே ஒரு குழப்பம் இருந்தது. பின், அது மெதுவாக மாறி வருகிறது. இதன் காரணத்தால், கடந்த நவம்பரில், கார்களின் முன்பதிவு, 20 சதவீதம் குறைந்தது. அதே சமயம், இம்மாத முன்பதிவு, 7 சதவீதம் அதிகரித்து உள்ளது.
எங்கள் நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள, ரோக்டாக் என்ற இடத்தில், மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை அமைத்து வருகிறது. இதற்காக, 3,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதில், 1,700 கோடி ரூபாய், ஏற்கனவே செலவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|