பதிவு செய்த நாள்
12 ஜன2017
09:52
மும்பை : கடந்த ஆண்டு நவம்பர் 11 ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக இன்று நிப்டி 8400 புள்ளிகளை எட்டி உள்ளது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பின் உரையில் குறிப்பிடதக்க வகையிலான எந்த கொள்கை அறிவிப்புக்களும் இல்லாததன் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் தளர்வடைந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தி ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அத்துடன் மின்துறை, சரக்கு போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மருந்து விற்பனை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளது. இவற்றின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 71.34 புள்ளிகள் உயர்ந்து 27,211.75 புள்ளிகளாகவும், நிப்டி 15.35 புள்ளிகள் உயர்ந்து 8396 புள்ளிகளாகவும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|