பதிவு செய்த நாள்
16 ஜன2017
03:00
ஸ்மார்ட் போன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய உதவும், யு.பி.ஐ., செயலி வாயிலாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டையும் மேற்கொள்ளலாம். இதற்கான வசதியை, எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட் அசெட் மேனேஜ்மெண்ட் மற்றும் ஐ.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளன.
முதலீட்டாளர்கள் இதுவரை, இணையம் மூலம் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய விரும்பினால் நெட் பாங்கிங் மற்றும் டெபிட் கார்ட் ஆகிய வழிகளில் பணம் செலுத்தலாம். இப்போது யு.பி.ஐ., செயலி மூலமும் பணம் செலுத்தி முதலீடு செய்யலாம். இந்த வசதியை பயன்படுத்த ஆண்ட்ராய்டு போன், யு.பி.ஐ., செயலி மற்றும் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ் ஆகியவை இருக்க வேண்டும். இந்த செயலி மூலம் தனிநபர்களுடன் பண பரிவர்த்தனை செய்வது போலவே வர்த்தக நிறுவனங்களுக்கும் பணம் அனுப்பலாம்.இதே முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், ஸ்மார்ட்போனில் இருந்து மியூச்சுவல் பண்ட் நிறுவன இணையதளத்தை அணுகி, நீங்கள் விரும்பும் திட்டத்தை தேர்வு செய்த பிறகு, பணம் செலுத்தும் வசதி பகுதியில், யு.பி.ஐ., செயலியை தேர்வு செய்து வி.பி.ஏ., மூலம் பணம் செலுத்தலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|