பதிவு செய்த நாள்
21 ஜன2017
06:01
கோல்கட்டா : நெதர்லாந்தின் இந்திய துாதர் அல்போன்சஸ் ஸ்டோலிங்கா கூறியதாவது: நெதர்லாந்தில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளில், இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பிற்கான, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், 20 சதவீதம், நெதர்லாந்து வாயிலாக நடைபெறுகிறது. அதனால், நெதர்லாந்தில், இந்திய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கிளைகள் அமைய வேண்டும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நெதர்லாந்து நிதி துறை வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், வங்கி கிளைகளை துவக்க வேண்டும். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகிய பின், நிதி துறையின் மையமாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.அதனால், இந்திய வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, நெதர்லாந்தில் கால்பதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், ஸ்மார்ட் சிட்டி, கப்பல், நீர்பாசனம், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில், நெதர்லாந்து நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|