பதிவு செய்த நாள்
23 ஜன2017
23:56
மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2016 டிசம்பரில், இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு, முந்தைய ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 32 சதவீதம் உயர்ந்து, 249 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதில், 82.5 சதவீதத்திற்கும் அதிகமாக, அதாவது, 206 கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்து, சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், இந்திய நிறுவனங்கள், பிரிட்டனில், 91.60 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.
இதற்கடுத்து, மொரீஷியஸ், 90 கோடி டாலர், அமெரிக்கா, 37 கோடி டாலர், நெதர்லாந்து, 26.50 கோடி டாலர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 19 கோடி டாலர் என்றளவில், இந்திய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி, இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடுகள் குறித்து, நாடு வாரியான விபரங்களை முதன்முதலாக, மாதாந்திர அடிப்படையில் வெளியிட துவங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|