பதிவு செய்த நாள்
24 ஜன2017
23:56
புதுடில்லி : அமேசான் இந்தியா நிறுவனம், நாகலாந்து அரசு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, அம்மாநில பெண் தொழில் முனைவோரின் தயாரிப்புகளை, ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான பயிற்சியை வழங்க திட்டமிட்டு உள்ளது.
இதன் மூலம், ஆன்லைன் விற்பனை தொடர்பான நுணுக்கங்களை, பெண்கள் சுலபமாக புரிந்து கொண்டு, வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.மேலும், பெண் தொழில் முனைவோர்களுக்கு, விரிவான தொழில் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றை அளிக்கவும், அமேசான் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அமேசான் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் கோபால் பிள்ளை கூறுகையில், ‘‘நாகலாந்தில் உள்ள, பெண் தொழில் முனைவோர்கள், இந்தியாவின், டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை, நிறுவனம் ஏற்படுத்தி தரும். குடிசைத் தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், அது சார்ந்த தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|