பண மதிப்பு நீக்­கத்தால் பெப்ஸி விற்­பனை பாதிப்புபண மதிப்பு நீக்­கத்தால் பெப்ஸி விற்­பனை பாதிப்பு ... மகிந்­திரா அண்ட் மகிந்­திரா 7 வாக­னங்கள் அறி­முகம் மகிந்­திரா அண்ட் மகிந்­திரா 7 வாக­னங்கள் அறி­முகம் ...
பொது துறை வங்­கி­களை காப்­பாற்ற ‘வாராக்­கடன் வங்கி’ அமைக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி ஆத­ரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
04:49

மும்பை : வசூ­லா­காத கடன்­களால், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பை தடுக்க, ‘தேசிய வாராக்­கடன் வங்கி’ அமைக்கும் கொள்­கைக்கு, ரிசர்வ் வங்கி ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.
கடந்த, 2016 ஜூன் நில­வ­ரப்­படி, பொது மற்றும் தனியார் துறை வங்­கி­களின் வாராக்­கடன், 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக உள்­ளது. இதில், பொதுத் துறை வங்­கி­களின், 20 கணக்­கு­களில் மட்டும், 1.54 லட்சம் கோடி ரூபாய், வசூ­லிக்க வேண்­டி உள்­ளது.
திணறல்ரிசர்வ் வங்கி, இரு ஆண்­டு ­க­ளுக்கு முன் பிறப்­பித்த உத்­த­ரவில், ‘அனைத்து வங்­கி­களும், வாராக்­க­டன்­களை, 2017 மார்ச் இறு­திக்குள் சீர­மைத்து, நிதி நிலையை மேம்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்’ என, தெரி­வித்­தி­ருந்­தது. எனினும், வங்­கிகள், வாராக்­க­டன்­க­ளுக்கு தீர்வு காண முடி­யாமல் திணறி வரு­கின்­றன. இந்­நி­லையில், மத்­திய நிதி­ய­மைச்­சகம், சமீ­பத்தில் பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டது. அதில், ‘தேசிய வாராக்­கடன் வங்கி’ என்ற அமைப்பை ஏற்­ப­டுத்தி, அதில் வங்­கி­களின் வசூ­லா­காத கடன்­களை மாற்றிக் கொள்­ளலாம் என, தலைமை பொரு­ளா­தார ஆலோ­சகர் அரவிந்த் சுப்­ர­ம­ணியன் பரிந்­து­ரைத்­தி­ருந்தார்.
இந்த திட்டம் அம­லானால், பொதுத் துறை வங்­கிகள், சர்­வ­தேச, ‘பேசல் 3’ விதி­மு­றைப்­படி, அவற்றின் பங்கு மூல­த­னத்தை உயர்த்தி, நிர்­ண­யிக்­கப்­பட்ட, மூல­தன ஆதாய விகி­தத்தை பரா­ம­ரிக்க வழி ஏற்­படும் என, கூறப்­ப­டு­கி­றது. தற்­போது, வங்­கிகள், அவற்றின் வாராக்­க­டனை, தள்­ளு­படி விலையில், சொத்து மறு­சீ­ர­மைப்பு நிறு­வ­னங்­க­ளிடம் விற்­பனை செய்­கின்­றன. அந்­நி­று­வ­னங்கள், கடனை வசூ­லித்துக் கொள்­கின்­றன.
ஆதரவு‘தேசிய வாராக்­கடன் வங்­கி’­யிடம், வாராக்­க­டன்­களை மாற்றும் போது, அவை, சந்தை விலைக்கு வழங்­கப்­படும் என்­பதால், வங்­கி­களின் இழப்பு குறையும். மேலும், வங்­கிகள், கடன் வழங்­கு­வதை மட்­டுமே இலக்­காக கொண்டு, திறம்­பட செயல்­பட முடியும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இது குறித்து, ரிசர்வ் வங்­கியின், துணை கவர்­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள விரால் ஆச்­சார்யா கூறி­ய­தா­வது:வங்­கி­களின் வசூ­லா­காத கடன், பெரிய பிரச்­னை­யாக உள்­ளதால், வாராக்­கடன் வங்கி அமைப்­பது உள்­ளிட்ட, பல­வ­கை­யான தீர்­வு­களை ஆராய்­வதில் தவ­றில்லை. வாராக்­கடன் விற்­ப­னையில், வங்­கி­க­ளுக்கு, உரிய விலை கிடைக்க வேண்டும். அதற்­கான விதி­மு­றை­களை, தெளி­வாக உரு­வாக்­கினால் பலன் கிடைக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.
ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி கவர்­ன­ராக இருந்த போது, வாராக்­கடன் வங்கி அமைக்கும் கொள்­கைக்கு ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை; தற்­போது, உர்ஜித் படேல் தலை­மை­யி­லான, ரிசர்வ் வங்­கியின் துணை கவர்னர், இக்­கொள்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
வங்கித் துறை, வாராக்­கடன் பிரச்­னையில் இருந்து விடு­பட வேண்டும். அப்­போது தான், சிறிய தொழில்­க­ளுக்கும், பிற துறை­க­ளுக்கும் தாரா­ள­மாக கடன் வழங்க முடியும். இதற்கு, ‘தேசிய வாராக்­கடன் வங்கி’ உதவும்.-உதய் கோட்டக்,தலைவர் , கோட்டக் மகிந்­திரா பேங்க்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)