பதிவு செய்த நாள்
21 பிப்2017
00:16
புதுடில்லி : பந்தன் பேங்க், சிறு கடன்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்க முடிவு செய்து உள்ளது.
இது குறித்து, அந்த வங்கியின் நிறுவனர் சந்திரஷேகர் கோஷ் கூறியதாவது: எங்கள் வங்கி, வாடிக்கையாளர்களிடம் இருந்து, இதுவரை, 19 ஆயிரத்து, 800 கோடி ரூபாயை, ‘டிபாசிட்’டாக திரட்டியுள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் அளவு, 20 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. ஆண்டுதோறும், வங்கியின் வளர்ச்சி, 30 – 40 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது, 23 ஆயிரத்து, 300 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், கூடுதலாக, 200 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக தொழில் துவங்குவோர், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபடுவோர், வீடு வாங்க விரும்புவோருக்கு, கடன் வழங்க வங்கி தயாராக உள்ளது. தற்போது வழங்கும் மொத்த கடனில், சிறு கடன்களின் பங்கு, 91 சதவீதமாக உள்ளது.
சிறிய அளவில் கடன் வாங்க விரும்புவோருக்கு, தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும். செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான போது, கடும் சவாலாக இருந்தது. தற்போது, பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|