பதிவு செய்த நாள்
21 பிப்2017
00:18
புதுடில்லி : மேப்மை இண்டியா நிறுவனம், 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
வரைபடங்கள், புவிசார் குறியீடு உள்ளிட்ட தொழிலில், மேப்மை இண்டியா ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது, 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதை, ஐந்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் வர்மா கூறியதாவது:எங்கள் நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கடந்த, 2004 – 05ல், மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட மேப்மை இண்டியா, தற்போது, 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. எங்கள் சேவையில், மேலும் பல புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்து வருகிறோம். இதன் மூலம், 2023ல், எங்கள் நிறுவனத்தின் வருவாய், ஐந்து மடங்கு அதிகரித்து, 1,000 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|