பதிவு செய்த நாள்
21 பிப்2017
00:20
மும்பை : இந்திய சில்லரை வணிகர்கள் கூட்டமைப்பும், பாஸ்டன் ஆலோசனை குழுமமும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:வணிகர்கள், தங்கள் தொழிலை மேம்படுத்த, ‘டிஜிட்டல்’ எனப்படும், மின்னணு தொழில்நுட்ப முறைக்கு மாற வேண்டும். அவர்கள், வலைதள சந்தை நிறுவனங்களுடன் இணைந்து, தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துவதன் மூலம், விற்பனையை அதிகரிக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவது, 3 சதவீதத்தில் இருந்து, 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், வலைதள பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை வளர்ச்சி, 9 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருட்கள் வீட்டிற்கே சுலபமாக வந்து விடுவதால், வலைதளத்தில் பொருட்கள் வாங்குகிறோம் என, 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்; இது, 2014ல், 40 சதவீதமாக இருந்தது. சில்லரை வியாபாரிகள், மின்னணு முறைக்கு மாறினால், லாப வரம்பு, 3 – 5 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|