பதிவு செய்த நாள்
21 பிப்2017
23:53
மும்பை : டாடா சன்ஸ் புதிய தலைவராக, என்.சந்திரசேகரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மும்பையில், டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான, பாம்பே ஹவுஸில், டாடா சன்ஸ் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பின், செய்தியாளர்களிடம் சந்திரசேகரன் பேசியதாவது: டாடா குழுமம், 10,300 கோடி டாலர் சொத்து மதிப்புடன், உப்பு முதல், சாப்ட்வேர் வரை பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தின் தலைமை பொறுப்பு, எனக்கு அளிக்கப்பட்டுள்ளதை, மிகப் பெரிய மரியாதையாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். அனைவருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, குழுமத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன். டாடா நிறுவனங்கள் அனைத்தும், தத்தமது துறைகளில், பிற நிறுவனங்களை அடுத்து இல்லாமல், முதலிடத்தில் நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், ஐ.டி., துறையில், டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில், 30 ஆண்டுகளாக சந்திரசேகரன் பணியாற்றி, அதன் சீரிய வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|