பதிவு செய்த நாள்
23 பிப்2017
00:37
புதுடில்லி : எச்.டி.சி., நிறுவனம், அதன் வணிகத்தை வலுப்படுத்த, பிரீமியம் வகையைச் சேர்ந்த, ஸ்மார்ட் போன் விற்பனையில் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் தலைவர் பைசல் சித்திக் கூறியதாவது: நிறுவனம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான, மொபைல் போன்களை விற்பனை செய்வதில்லை. எனினும், அதிக போட்டி காரணமாக, அப்பிரிவில் கவனம் செலுத்துவதை குறைத்து கொண்டோம். இதனால், 10 ஆயிரம் ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரையுள்ள, பிரீமியம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
நிறுவனம், பிரீமியம் வகையைச் சேர்ந்த, ‘யு பிளே, யு அல்ட்ரா’ எனும், இரு புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றின் விலை, முறையே, 39,990 ரூபாய் மற்றும் 59,990 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், வரும் ஜூன் மாதத்திற்குள், மெய்நிகர் தன்மை வாய்ந்த, ‘வைவ் ஹெட்செட்’டை, இந்தியாவில், அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம், பாடல்களை மிக துல்லியமாக கேட்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|