பதிவு செய்த நாள்
23 பிப்2017
00:39
புதுடில்லி : கலர்பார் காஸ்மெட்டிக்ஸ், 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துஉள்ளது.
உள்நாட்டைச் சேர்ந்த, கலர்பார் காஸ்மெட்டிக்ஸ், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட, 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சமிர் மோடி கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், 250 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. தற்போது, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில், எங்கள் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், எங்கள் பொருட்களை விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து, புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்படும். இந்த விரிவாக்க நடவடிக்கைக்காக, அடுத்த ஐந்து ஆண்டு களில், 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், அடுத்த நிதிஆண்டில், நிறுவனத்தின் விற்றுமுதல், 500 கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|