பதிவு செய்த நாள்
23 பிப்2017
00:41
மும்பை : ‘இந்தியாவின் வாகன கடன் சந்தை, 2020ல், இரு மடங்கு உயர்ந்து, 2.60 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, யர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2014 – 15ம் நிதிஆண்டில், பயணிகள் வாகனங்களுக்கான கடன் சந்தையின் மதிப்பு, 1.60 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; இது, 2020ல், 2.60 லட்சம் கோடி ரூபாயாக உயரும். புதுமையான, அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகும் வாகனங்கள், கவர்ச்சியான விலை, வசீகரிக்கும் விளம்பரங்கள் போன்றவற்றால், கடன் மூலம் வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடாக, இந்திய சாலைகளில், வாகனங்களின் எண்ணிக்கையும், அடுத்த மூன்று ஆண்டுகளில், 50 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
கவர்ச்சியான கடன் தவணை திட்டம் இருந்தால், தங்கள் பட்ஜெட்டை விட, கூடுதல் தொகைக்கு கார் வாங்க, 80 சதவீதம் பேர் தயாராக உள்ளனர். பல வகை கடன் திட்டங்களால், கார் விற்பனை, 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என, 58 சதவீத கார் முகவர்கள் தெரிவித்து உள்ளனர். வாகன கடன் சந்தையின் வளர்ச்சிக்கு, விதவிதமான கார்களை வாங்குவோரும் துணை புரிகின்றனர். புதிதாக வாங்கிய காரை, 4 – 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவதாக, 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்; 30 சதவீதத்தினர், 2 – 4 ஆண்டு களுக்கு ஒரு முறை, புதிய காருக்கு மாறுகின்றனர்.
சராசரியாக, ஒரு காருக்கு, 3.80 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. வாகன கடன் சுலப தவணையில் கிடைப்பதால், அதன் பயன்பாடு, மதிப்பின் அடிப்படையில், 2025ல், 110 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது; இது, 2010ல், 43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|