இந்­தி­யாவில் முத­லிடம் பிடிக்க ஆடி நிறு­வனம் முயற்சிஇந்­தி­யாவில் முத­லிடம் பிடிக்க ஆடி நிறு­வனம் முயற்சி ... ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் தோல்­வியை தவிர்க்க மத்­திய அரசு ஆத­ர­வ­ளிப்­பது அவ­சியம்: ‘பிக்கி’ ஆய்­வ­றிக்கை வெளி­யீடு ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் தோல்­வியை தவிர்க்க மத்­திய அரசு ... ...
வாகன கடன் சந்தை ரூ.2.60 லட்சம் கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
00:41

மும்பை : ‘இந்­தி­யாவின் வாகன கடன் சந்தை, 2020ல், இரு மடங்கு உயர்ந்து, 2.60 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்’ என, யர்னஸ்ட் அண்ட் யங் நிறு­வனம் தெரி­வித்­துள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2014 – 15ம் நிதி­ஆண்டில், பய­ணிகள் வாக­னங்­க­ளுக்­கான கடன் சந்­தையின் மதிப்பு, 1.60 லட்சம் கோடி ரூபா­யாக இருந்­தது; இது, 2020ல், 2.60 லட்சம் கோடி ரூபா­யாக உயரும். புது­மை­யான, அதி­ந­வீன வச­தி­க­ளுடன் அறி­மு­க­மாகும் வாக­னங்கள், கவர்ச்­சி­யான விலை, வசீ­க­ரிக்கும் விளம்­ப­ரங்கள் போன்­ற­வற்றால், கடன் மூலம் வாகனம் வாங்­குவோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கி­றது. அதற்கு ஈடாக, இந்­திய சாலை­களில், வாக­னங்­களின் எண்­ணிக்­கையும், அடுத்த மூன்று ஆண்­டு­களில், 50 சத­வீதம் உயரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
கவர்ச்­சி­யான கடன் தவணை திட்டம் இருந்தால், தங்கள் பட்­ஜெட்டை விட, கூடுதல் தொகைக்கு கார் வாங்க, 80 சத­வீதம் பேர் தயா­ராக உள்­ளனர். பல வகை கடன் திட்­டங்­களால், கார் விற்­பனை, 10 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உயரும் என, 58 சத­வீத கார் முக­வர்கள் தெரி­வித்து உள்­ளனர். வாகன கடன் சந்­தையின் வளர்ச்­சிக்கு, வித­வி­த­மான கார்­களை வாங்­கு­வோரும் துணை புரி­கின்­றனர். புதி­தாக வாங்­கிய காரை, 4 – 6 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை மாற்­று­வ­தாக, 40 சத­வீதம் பேர் கூறி­யுள்­ளனர்; 30 சத­வீ­தத்­தினர், 2 – 4 ஆண்­டு ­க­ளுக்கு ஒரு முறை, புதிய காருக்கு மாறு­கின்­றனர்.
சரா­ச­ரி­யாக, ஒரு காருக்கு, 3.80 லட்சம் ரூபாய் கடன் வழங்­கப்­ப­டு­கி­றது. வாகன கடன் சுலப தவ­ணையில் கிடைப்­பதால், அதன் பயன்­பாடு, மதிப்பின் அடிப்­ப­டையில், 2025ல், 110 லட்சம் கோடி ரூபா­யாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது; இது, 2010ல், 43 லட்சம் கோடி ரூபா­யாக இருந்­தது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)