பதிவு செய்த நாள்
23 பிப்2017
20:39
புதுடில்லி : பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் என்ற பிராண்டு பெயரில், தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், டெலினார் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இரு நிறுவனங்கள் இடையே, 6,500 – 7,000 கோடி ரூபாய் கைமாறும் என, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. டெலினார் இந்தியா நிறுவனம், ஆந்திரா, பீஹார், மஹாராஷ்டிரா, குஜராத், அசாம், உ.பி., கிழக்கு – மேற்கு ஆகிய, ஏழு தொலை தொடர்பு வட்டங்களில், மொபைல் போன் சேவையை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும், ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படுவர். இதன் மூலம், ஏர்டெல் சந்தா தாரர்கள் எண்ணிக்கை, கணிசமாக அதிகரிக்கும். சமீபத்தில், வோடபோன் நிறுவனம், ஐடியா செல்லுலார் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. இதன் மூலம், இந்திய தொலை தொடர்பு சேவையில், அதிகளவில் சந்தா தாரர்களை கொண்ட நிறுவனமாக, வோடபோன் உருவெடுக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|