பதிவு செய்த நாள்
24 பிப்2017
14:34
புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் ஜியோ பிரைம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மிகக் குறைந்த கட்டணத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த ஜியோ பிரைம் திட்டத்தில் அடங்கும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டிக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம், 3ஜி அல்லது 4 ஜி போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.100 கட்டணத்தில் கூடுதலாக 10 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது புதிய சலுகை இல்லை எனவும், இதுவரை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சில வாரங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி. மைஏர்டெல் ஆப்ஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் ஆபர் என்ற திட்டத்தின் கீழ் சில இலவச சலுகைகள் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் முதல் முறையாக, ரூ.259 கட்டணத்தில் 10 ஜிபி வரையிலான டேட்டாக்களை பயன்படுத்தலாம் என சலுகையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|