பதிவு செய்த நாள்
25 பிப்2017
04:31
மும்பை : ரஸ்னா நிறுவனம், நொறுக்குத் தீனி விற்பனையின் மூலம், 250 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
பழச்சாறு தயாரிக்க பயன்படும் பவுடர் தொழிலில், ரஸ்னா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ‘விட்டோஸ்’ என்ற பெயரில், நொறுக்குத் தீனி வகைகளை விற்பனை செய்கிறது. இதுவரை, நொறுக்குத் தீனி வகைகளுக்காக, ரஸ்னா, 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் பிருஸ் கம்பாட்டா கூறியதாவது: இந்தியாவில், உடனடி பழச்சாறு தயாரிக்க பயன்படுத்தப்படும் பவுடரின் சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. அதில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 85 சதவீதமாக உள்ளது. தற்போது, நொறுக்குத் தீனி சந்தை மதிப்பு, 5,000 கோடி ரூபாயாக உள்ளது. இது, ஆண்டுதோறும், 15 – 16 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. எங்கள் நிறுவனம், நொறுக்குத் தீனி சந்தையில், அடுத்த மூன்று ஆண்டுகளில், 250 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது. இவை, நடப்பாண்டில், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|