பதிவு செய்த நாள்
25 பிப்2017
04:32
புதுடில்லி : வர்த்தக வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள, வால்வோ நிறுவனம், இந்தியாவில், நீண்ட துார சரக்கு போக்குவரத்து பிரிவில், கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இக்குழுமத்தின் இந்திய பிரிவின் தலைவர் நிக்லஸ் கஸ்டப்சன் கூறியதாவது: நிறுவனம், தற்போது, சுரங்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற பிரீமியம் டிரக், பேருந்து உள்ளிட்ட வர்த்தக வாகனங்களை தயாரித்து வருகிறது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு கொள்கை நடைமுறைக்கு வரும். இதன் மூலம், நீண்ட துார சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என, நம்புகிறோம். இதனால், இத்துறையில் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளோம்.
தற்போது, நுழைவு வரி காரணமாக, மாநில எல்லைகளில், பல மணி நேரமாக, சரக்குகள் தேங்குகின்றன. ஆனால், ஜி.எஸ்.டி., அமலானால், இத்தகைய பிரச்னைகள் தவிர்க்கப்படும்.பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், கடந்த இரு மாதங்களுக்கு முன் விற்பனை பாதிக்கப்பட்டாலும், ஜனவரியில் நிலைமை சீரடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசு, ஜூலை 1 முதல், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|