ஏப்., 1ல் எஸ்.பி.ஐ., உடன் 5 துணை வங்­கிகள் இணைப்புஏப்., 1ல் எஸ்.பி.ஐ., உடன் 5 துணை வங்­கிகள் இணைப்பு ... சவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.104 உயர்வு சவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
இந்­திய வல்­லு­னர்­களை புறக்­க­ணித்­தது தவறு; சீன அரசின் தேசிய நாளிதழ் கருத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
04:35

பீஜிங் : ‘அறி­வியல் மற்றும் தகவல் தொழில்­நுட்­பத்தில், தலை­சி­றந்து விளங்கும் இந்­திய வல்­லு­னர்­களை புறக்­க­ணித்­து ­விட்டு, அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­களை நாடி­யதன் மூலம், சீனா மிகப்­பெ­ரிய தவறு செய்து விட்­டது’ என, அந்­நாட்டின் அரசு நாளி­த­ழான, ‘குளோபல் டைம்ஸ்’ தெரி­வித்­துள்­ளது.
இந்­தி­யாவை தொடர்ந்து விமர்­சனம் செய்து வந்த இந்த நாளிதழ், முதன்­மு­றை­யாக, நம் நாட்­டிற்கு ஆத­ர­வான கட்­டு­ரையை வெளி­யிட்டு உள்­ளது.
அதன் விபரம்:கடந்த சில ஆண்­டு­க­ளாக, வெளி­நா­டு­களைச் சேர்ந்த ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், அவற்றின் ஆய்வு மற்றும் மேம்­பாட்டு மையங்­களை, சீனாவில் அமைக்க ஆர்வம் காட்­டின. இதனால், சீனாவில் வர­லாறு காணாத வகையில், தொழில்­நுட்ப வேலை­வாய்ப்­புகள் அதி­க­ரித்­தன. தற்­போது, உயர் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் பார்வை, இந்­தி­யாவின் பக்கம் திரும்­பி­யுள்­ளது. சீனர்­களை விட, குறை­வான ஊதி­யத்தில், திறமை வாய்ந்த வல்­லு­னர்கள் இந்­தி­யாவில் கிடைப்­பதும், இளையோர் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளதும் தான், இதற்கு காரணம்.
உதா­ர­ண­மாக, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, சி.ஏ., டெக்­னா­லஜிஸ் நிறு­வனம், சீனாவில், 300 வல்­லு­னர்­க­ளுடன் செயல்­பட்டு வந்த, அதன் ஆய்வு மையத்தை மூடி விட்டு, இந்­தி­யாவில், 2,000 வல்­லு­னர்­களைக் கொண்ட பிரிவை அமைத்­துள்­ளது. இது போல, சீனாவில் உள்ள, பல ஆய்வு நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் கால்­ப­தித்து வரு­கின்­றன. சீனா, தொழில்­நுட்ப கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு, கோடிக் கணக்­கான டாலர்­களை பட்­ஜெட்டில் ஒதுக்­கு­கி­றது. அது போல, வலை­த­ளங்கள் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள், ஆய்வு மையங்கள் ஆகி­ய­வற்றின் வளர்ச்­சிக்கும், ஏரா­ள­மான ஊக்­கச் ­ச­லு­கை­களை வழங்­கு­கி­றது.
இருந்த போதிலும், சீனாவில் முதியோர் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­வதும், பணி­யாற்றக் கூடிய வயதில் உள்­ளோரின் எண்­ணிக்கை குறைந்து வரு­வதும், பாத­க­மான அம்­சங்­க­ளாக உள்­ளன. அதனால், சீன அரசின் முயற்­சியால், புதிய தொழில்­நுட்ப கண்­டு­பி­டிப்பு திட்­டங்கள் பெரு­கி­னாலும், அவற்­றுக்­கான வல்­லு­னர்­க­ளுக்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­டு உள்­ளது. சீனா, இந்­திய வல்­லு­னர்­களை புறக்­க­ணித்து, அமெ­ரிக்க, ஐரோப்­பிய வல்­லு­னர்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­துவம் அளித்­தது தவறு.
அது­மட்­டு­மின்றி, இந்­திய அறி­வியல் வல்­லு­னர்­களை ஈர்ப்­பதில் போதிய அக்­கறை காட்­டவும், சீனா தவறி விட்­டது. இதை உணர்ந்து, தற்­போது இந்­தியா போன்ற நாடு­களில் உள்ள, தொழில்­நுட்ப வல்­லு­னர்­களை ஈர்ப்­பதில், சீனா கவனம் செலுத்தத் துவங்­கி­யுள்­ளது. சீனாவின் குய்ஸோ மாகா­ணத்தில் உள்ள நிறு­வ­னங்கள், இந்­திய வல்­லு­னர்­களை ஈர்க்கும் நோக்கில், வீடு, காப்­பீடு, போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­களை வழங்­கு­கின்­றன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)