பதிவு செய்த நாள்
25 பிப்2017
14:00
புதுடில்லி : வாட்ஸ்ஆப் தனது வொது பிறந்தநாளை நேற்று கொண்டாடியது. முன்னாள் யாஹூ பணியாளர்களான உக்ரைனைச் சேர்ந்த ஜன் கோம் என்பவர் பிரைன் ஆக்டனுடன் சேர்ந்து 2009 ம் ஆண்டு வாட்ஸ்ஆப் நிறுவனத்தை துவக்கினார்.
இன்று உலகம் முழுவதும் மாதத்திற்கு 1.2 பில்லயன் பேர் வாட்ஸ்ஆப்பில் இணைகிறார்கள். இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்.
டில்லி வந்துள்ள பிரைன் ஆக்டன் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் அவர், இந்தியாவில் வாட்ஸ்ஆப் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. எங்களின் முக்கிய சந்தையாக இந்தியா மாறி உள்ளது. இதுவரை மெசேஜ்களை மேம்படுத்துவதற்காக இதற்கு முந்தைய ஆண்டுகளில் உழைத்து வந்தோம். தற்போது, வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதற்காகவே வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. டிஜிட்டல் சேவைகளை ஊக்குவிக்க பணிகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. எலக்ட்ரானிக் பரிவர்த்தனை குறித்து பேசுவதற்காகவே மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தேன். வாட்ஸ்ஆப் மூலல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|