பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:19
மும்பை : அட்டை பெட்டி தொழிலுக்கு, ‘கிராப்ட் பேப்பர்’ எனப்படும், பழுப்பு நிற காகிதம் இன்றியமையாததாக உள்ளது. இக்காகிதத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், சப்ளை குறைந்துள்ளதாலும், அட்டை பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, தானியங்கி முறையில் அட்டை பெட்டி தயாரிக்கும், 300 பிரிவுகள் மற்றும் பகுதி தானியங்கி முறையில் செயல்படும், 12 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய அட்டை பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர் கிரிட் மோடி கூறியதாவது:கடந்த ஒரு மாதமாக, காகித ஆலைகளின் விலை உயர்வால், ஆண்டுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள, அட்டை பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பழுப்பு காகித தயாரிப்பு நிறுவனங்கள், அவ்வப்போது, குறிப்பிட்ட கால இடைவெளியில், தொழிற்சாலைகளை மூடி விடுவதால், கிராப்ட் பேப்பர் சப்ளை குறைந்துள்ளது. கூடுதல் விலைக்கு, பழுப்பு காகிதத்தை வாங்குவதால், அட்டை பெட்டிகளின் விலையை, குறைந்தபட்சம், 12 சதவீதம் உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த சுமை, நுகர்வோரின் தலையில் தான் விழும் என்பதால், மத்திய அரசு, உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|