பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:20
மும்பை : ர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள, ஹோண்டா நிறுவனம், அதன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, குஜராத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் முதன்மை அதிகாரி ஒய்சிரோ உனே கூறியதாவது:நிறுவனத்திற்கு, ஏற்கனவே, இந்தியாவில், கிரேட்டர் நொய்டா மற்றும் தபுகுரா ஆகிய இடங்களில், தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து, கார்கள் அசெம்பிளிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.கடந்த, 2016ல், நிறுவனத்தின் விற்பனை, 25.3 சதவீதம் குறைந்து, 1,58,658 ஆக உள்ளது. இது, 2015ல், 2,12,372 ஆக அதிகரித்து இருந்தது. நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க, குஜராத் மாநிலம், விதலாபுரத்தில், 380 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இத்திட்டம், உடனடியாக அமலுக்கு வரவில்லை என்றாலும், எதிர் காலத்தில், இந்தியாவில் கார் விற்பனையை உயர்த்த வழிவகுக்கும் என, நம்புகிறோம்.தற்போது, பெட்ரோலில் இயங்கக் கூடிய, கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|