தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மார்ச் 3 வரை வாங்­கலாம்தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மார்ச் 3 வரை வாங்­கலாம் ... ‘பாரத் கியூஆர் கோடு’ வசதி! ‘பாரத் கியூஆர் கோடு’ வசதி! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்­டுக்­கடன் சுமையை குறைக்கும் வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
00:02

கடந்த சில ஆண்­டு­களில், வீட்டுக் கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம், தற்­போது மிகவும் குறை­வாக உள்­ளது. ஸ்டேட் வங்கி உள்­ளிட்ட வங்­கிகள், வட்டி விகி­தத்தை குறைத்­துள்­ளன. வட்டி விகிதம் குறைந்­துள்ள சூழல், புதி­தாக கடன் பெற இருப்­ப­வர்­களை மகிழ்ச்­சியில் ஆழ்த்­தி­உள்­ளது. ஏற்­க­னவே கடன் பெற்­ற­வர்­களுக்கும் இதனால் பலன் உண்­டாகும்.
வட்டி விகிதம் குறைந்­தி­ருப்­பதால், மாதத் தவணை குறை­யவும், அதற்­கேற்ப கட­னுக்­கான காலமும் குறையும் வாய்ப்­பு உள்ளது. இந்­நி­லையில், கடன் தொகையின் ஒரு பகு­தியை முன் கூட்­டியே செலுத்­து­வ­தற்கும் இது சரி­யான நேரம் என, வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். இதன் மூலம் கடன் சுமையை மேலும் குறைக்­கலாம்.
நீண்ட கால திட்­ட­மிடல்வீட்­டுக்­கடன் என்­பது நீண்ட கால பொறுப்­பாகும். இந்த கடனை அடைக்க செலுத்தும் மாதத் தவணை, சம்­ப­ளத்தின் கணி­ச­மான பகு­தியை எடுத்துக் கொள்ளும். எனவே, வாய்ப்பு கிடைக்கும் போது கடன் அசல் தொகையில் ஒரு பகு­தியை முன் கூட்­டியே செலுத்­து­வதன் மூலம் செலுத்த வேண்­டிய அசலை குறைக்­கலாம். அசல் தொகைக்­கேற்ப வட்டி அமையும் என்­பதால் மாதத் தவணை குறையும். பொது­வாக வங்­கிகள் மாதத் தவ­ணையை குறைக்­காமல் கட­னுக்­கான காலத்தை குறைக்­கின்­றன. எனவே, முன் கூட்­டியே ஒரு தொகையை செலுத்­து­வதன் மூலம் குறிப்­பிட்ட காலத்­திற்கு முன்­ன­தா­கவே கடனை அடைத்­து­விட முடியும்.
பொது­வா­கவே, வீட்­டுக்­க­ட­னுக்­கான தொகையில் ஒரு பகு­தியை, இடைப்­பட்ட காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது செலுத்­து­வது, கடன் சுமையை குறைப்­ப­தற்­கான உத்­தி­யாக பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது. என்­றாலும், வட்டி விகிதம் குறைந்­துள்ள சூழல் இதற்கு இன்னும் ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கி­றது. இதற்­கென ஒரு தொகையை சேமித்து வந்து, கணி­ச­மான தொகை சேர்ந்த பின், அசலின் ஒரு பகு­தி­யாக செலுத்­தலாம்.
வட்டி சேமிப்புவட்டி விகிதம் குறையும் போது, கடனில் ஒரு பகு­தியை செலுத்தி அசலை குறைக்கும் போது, அதற்­கேற்ப மொத்­த­மாக செலுத்த வேண்­டிய வட்­டியும் குறையும்; இது சேமிப்­பாக அமையும். வட்டி விகிதம் இன்னும் சில காலாண்­டு­க­ளுக்கு இதே நிலையில் நீடிக்கும் வாய்ப்­புள்­ளதால், கடனில் ஒரு பகு­தியை திருப்பி செலுத்­து­வது தொடர்­பாக திட்­ட­மிட இது ஏற்ற நேரம். மேலும், எதிர்­கா­லத்தில் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு நிச்­சயம் உள்­ளது. அவ்­வாறு நேரும் போது, ஏற்­க­னவே ஒரு தொகையை செலுத்தி, அசலை குறைத்து விட்­டதால், வட்டி விகித உயர்வின் சுமை குறை­வா­கவே இருக்கும். எனவே, மாதந்­தோறும் உப­ரி­யாக உள்ள தொகையை, கடனை அடைக்கும் நோக்­கத்­துடன் சேமிக்கத் துவங்­கலாம்.
எனினும், வீட்டுக் கடனை முன்­கூட்டியே செலுத்த முற்­படும் போது, அதே தொகையை வேறு வித­மாக முத­லீடு செய்தால் கிடைக்கக் கூடிய பல­னையும் ஒப்­பிட்டுப் பார்த்துக் கொள்­வது நல்­லது. இரண்டில் எந்த நட­வ­டிக்கை அதிக பலன் தரும் என்­ப­தையும் பரி­சீ­லிக்க வேண்டும். மேலும் வீட்டுக் கட­னுக்கு வரிச்­ச­லுகை இருப்­ப­தையும் மனதில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)