இந்தியாவில் ஹோண்டா டபிள்யூ.ஆர் - வி கார் அறிமுகம்இந்தியாவில் ஹோண்டா டபிள்யூ.ஆர் - வி கார் அறிமுகம் ... 1.40 லட்­சம் கார்­கள் விற்­பனை:மாருதி இந்­தியா சாதனை 1.40 லட்­சம் கார்­கள் விற்­பனை:மாருதி இந்­தியா சாதனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா நானோ, நிசான் மைக்ரோ கார்களுக்கு இனி "டாட்டா"
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2017
15:32

புதுடில்லி : ஏற்கனவே விற்பனையில் மந்தமடைந்துள்ள ஏறக்குறைய 12 கார்களின் உற்பத்தியை நிறுத்த இந்திய ஆட்டோமேடிவ் ஒழுங்குமுறை கழகம் முடிவு செய்துள்ளது.
மாசு கட்டுப்பாடு, திருத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கார்களில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகள் கொண்டு வரப்பட உள்ளன. மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே தனது ரிட்ஸ் மாடல் கார் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதே போன்ற அறிமுகம் செய்து பல ஆண்டுகள் ஆன இண்டிகா மாடல் உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஐ 10 மாடலையும், ஹோண்டா நிறுவனம் மொபிலியோ மாடலையும் நிறுத்தி உள்ளன.
இந்த வரிசையில் செவர்லட் டவேரா, நிஸ்ஸான் மைக்ரா, மகேந்திரா சைலோ, டாடா நானோ உள்ளிட்ட 12 கார் மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மான்சா, விஸ்டா, ஏரியா, மோவஸ், இண்டிகோ, நானோ, இண்டிகா, வென்சர் உள்ளிட்ட கார் மாடல்களின் உற்பத்தியை ஏற்கனவே நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய விதிமுறைகள், தர உயர்வு உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக உருவாக்கி அக்டோபர் மாதத்திற்கு பிறகே அனைத்து கார்களும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாகவே மந்தமாக விற்பனையாகும் கார் மாடல்களின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.
மாருதி நிறுவனம் அடுத்த தலைமுறை சிவிப்ட் காரையும், அடுத்த தலைமுறை ஆல்டோ காரையும் 2019 ல் அறிமுகம் செய்ய உள்ளது. மகேந்திரா நிறுவனமும் கூடுதல் இருக்கை வசதி கொண்டதாக சைலோ மாடல் காரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டாஸ் நிறுவனமும் புதிய தலைமுறை மாடல்களான டியாகோ, டிகோர், நெக்சான், ஹெக்சா உள்ளிட்ட கார்களை ஆண்டுக்கு 2 வீதம் புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)