பதிவு செய்த நாள்
21 மார்2017
01:01
சென்னை : கிரீம்பெல் ஐஸ் கிரீம், விரிவாக்க திட்டங்களுக்காக, 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. தேவயானி புட் இண்டஸ்ட்ரீஸ், கிரீம்பெல் என்ற பிராண்டில், ஐஸ் கிரீம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில், ஐஸ்கிரீம் சந்தையில் களமிறங்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் அரோரா கூறியதாவது: நிறுவனத்திற்கு, ஹிமாச்சல் பிரதேசத்தில், பாடி; கோவா ஆகிய இடங்களில், ஐஸ் கிரீம் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்தியாவில், ஐஸ் கிரீம் சந்தை மதிப்பு, 4,500 கோடி ரூபாயாக உள்ளது. அதில், நிறுவனத்தின் பங்கு, 15 சதவீதம். ஐஸ் கிரீம் சந்தை ஆண்டு தோறும் வளர்ச்சி கண்டு வருகிறது.
அடுத்த சில மாதங்களில், நிறுவனம், தமிழகத்தில், ஐஸ் கிரீம் விற்பனையில் ஈடுபட உள்ளது. விரிவாக்க திட்டங்கள் மேற்கொள்வதன் மூலம், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்பதால், அதற்காக, 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|