பதிவு செய்த நாள்
21 மார்2017
01:02
புதுடில்லி : சி.எல்.எஜூகேட், சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள், இந்த வாரம், பங்கு வெளியீட்டின் மூலம், 584 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளன.
புதிய நிறுவனத்தை கையகப்படுத்துதல், கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, சி.எல்.எஜூகேட், பங்குச் சந்தையில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, நேற்று துவங்கி, 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 239 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த, சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ், பங்குகளை வெளியிட்டு, 345 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 440 – 460 ரூபாய் என்றளவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சங்கரா பில்டிங் பங்கு வெளியீடு, வரும், 22ல் துவங்கி, 24ம் தேதி நிறைவடைகிறது. 2016ல், 26 நிறுவனங்கள், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|