பங்கு வெளியீட்டில் 2 நிறுவனங்கள்பங்கு வெளியீட்டில் 2 நிறுவனங்கள் ... மின்னணு வணிகத்தில் மூல வரி பிடித்தம்; ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது மின்னணு வணிகத்தில் மூல வரி பிடித்தம்; ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது ...
‘பங்கு சந்­தை­யில் வரி ஏய்ப்பை அனு­ம­திக்க மாட்­டோம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2017
01:03

புதுடில்லி : ‘‘பங்குச் சந்தைகளை வரி ஏய்ப்புக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்,’’ என, பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி ஆசிஷ் சவுகான் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பங்குச் சந்தைகளில், அதிகளவில் வர்த்தகம் நடைபெறாத, சொற்ப மதிப்புள்ள பங்குகள் மூலம் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும், விலையை செயற்கையாக உயர்த்தி லாபம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இது போன்ற வரி ஏய்ப்புகள், வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பங்கு விற்பனை வருவாய்க்கு, மூலதன ஆதாய வரியில் விலக்கு அளிக்கப்படுவது தான், வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கிறது.
மிகச் சொற்பமான பங்கு மதிப்பு கொண்டுள்ள, சிறிய நிறுவனங்களின் பங்குகள் மூலமாகத்தான், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், பெரிய நிறுவனங்களின் பங்குகளுக்கும், இத்தகைய வரி ஏய்ப்பில் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மூலதன ஆதாய வரி விலக்கு சலுகையை பெறுவதில், பெரிய நிறுவனங்களின் பங்கு, 80 – 90 சதவீதமாக உள்ளது. ஆகவே, மத்திய அரசு பங்கு விற்பனை வருவாய்க்கு, மூலதன ஆதாய வரி விலக்கு சலுகை குறித்து, மறுஆய்வு செய்ய வேண்டும்.
இந்த சலுகையில் உள்ள ஓட்டைகளை ஆராய்ந்து, பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் வரி ஏய்ப்பை முழுவதுமாக தடுக்க உறுதியான சட்டம் இயற்ற வேண்டும். மத்திய பட்ஜெட்டில், பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தி வாங்கப்படும் பங்கு விற்பனை வாயிலான வருவாய்க்கு மட்டும், மூலதன ஆதாய வரி விலக்கு சலுகை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பங்குச் சந்தைகளை வரி ஏய்ப்புக்கு பயன்படுத்த, பி.எஸ்.இ., அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)