பதிவு செய்த நாள்
21 மார்2017
01:04
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, பல முனை வரிகளை நீக்கி, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பிற்கு வகை செய்கிறது.
வரும், ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ள இந்த வரி விதிப்பின் கீழ், மின்னணு வணிக நிறுவனங்கள், அவற்றின் சப்ளையர்களுக்கு வழங்கும் தொகையில், 1 சதவீதம் வரை மூல வரி பிடித்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன்படி, அமேசான், ஸ்நாப்டீல் போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள் வாயிலாக பொருட்களை விற்பனை செய்வோரிடம் இருந்து, 1 சதவீதம் வரை மூல வரி வசூலிக்கப்படும்.ஏற்கனவே, ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பொருட்களை அனுப்புவதற்கு, 1 சதவீதம் மூல வரி வசூலிக்கும் விதிமுறை, ஜி.எஸ்.டி., குழுவின் மாதிரி சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
தற்போது, மின்னணு வணிக நிறுவனங்கள் வாயிலான விற்பனைக்கும், 1 சதவீதம் வரை, மூல வரி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மொத்தம், 2 சதவீத மூல வரி வசூலிக்கப்படும். வரும் ஜூலை 1 முதல், இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|