பதிவு செய்த நாள்
22 மார்2017
05:22
புதுடில்லி : இந்தியாவில், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், 10 பெரிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை வடிவமைக்கும் பணியில், ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில், நிடி ஆயோக் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், முன்னுரிமை அடிப்படையில், 10 பெரிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை தேர்வு செய்து, செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து, இத்திட்டங்களை நிறைவேற்றும். திட்ட மேம்பாட்டிற்கான அனைத்து ஆலோசனைகள் மற்றும் ஆதரவை, நிடி ஆயோக் வழங்கும். இதன் மூலம், திட்டங்களை விரைவாக முடிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|