பதிவு செய்த நாள்
22 மார்2017
05:23
சென்னை : பழச்சாறு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மன்பசந்த் நிறுவனம், தமிழகம் மற்றும் தென் இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஸ்ரீநகரில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலை ஒன்றை துவங்கியுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரேந்திர சிங் கூறியதாவது: தமிழகம் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். தமிழகம் மூலமாக தென் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சந்தைகளிலும், எங்கள் தயாரிப்புகள், முக்கியமாக, ‘ப்ரூட்ஸ் அப்’ விற்பனை அதிகரிக்கும் என கருதுகிறோம். மன்பசந்த் நிறுவனம், வதோதரா, வாரணாசி மற்றும் இந்தியாவின் கிழக்கு பகுதியில் ஓர் இடம் என, 3 பழச்சாறு உற்பத்தி ஆலைகளை அமைக்கிறது. இந்த புதிய ஆலைகள், வரும் 12 முதல் 18 மாதங்களில் நிறுவனத்தின் உற்பத்தியை இரட்டிப்பு ஆக்குவது மட்டுமின்றி, புதிய சந்தையில் மன்பசந்த் நுழையவும் வழிவகுக்கும்.
கார்பனேட்டட் பழச்சாறு, பிரீமியம் பழச்சாறு, மாம்பழச்சாறு உள்ளிட்ட எங்கள் தயாரிப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள, 8,000த்திற்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கடைகளில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|