பதிவு செய்த நாள்
22 மார்2017
05:23
பீஜிங் : சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஜென்ஜியாங் நகரில், இந்தியா – சீனா வர்த்தக முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சி, கடந்த, 16ல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து, ஷாங்காய் நகரில் உள்ள, இந்திய துணை துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவின் பல்வேறு துறைகளில், சீன நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், வர்த்தக, முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இதில், இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அடிப்படை கட்டமைப்பு, மின் துறை, ஸ்மார்ட் சிட்டி, நகர்ப்புற போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் காணப்படும், முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் இருந்து, எல் அண்டு டி, டி.சி.எஸ்., – ரிலையன்ஸ், ஜெட் ஏர்வேஸ், அதானி குழுமம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங் களின் தலைமை செயல் அதிகாரிகள், மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள், இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள், விதிமுறைகள், தொழில் துவங்க அளிக்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, சீன நிறுவனங்களுக்கு விரிவாக விளக்கினர்.
சீன நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், பரஸ்பர வணிகம் தொடர்பாக, பேச்சு நடத்தினர்.அப்போது, பல நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வ மாக உள்ளதாக தெரிவித்துள்ளன. இந்தியாவின் தொழில் வாய்ப்புகள் குறித்த அனைத்து விபரங்களையும், சீன முதலீட்டாளர்கள், சுலபமாக தெரிந்து கொள்வதற்காக, www.chinaindia360.com என்ற புதிய வலைதளம் துவங்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக, சீன முதலீட்டாளர்கள், ஏப்., அல்லது மே மாதம், இந்தியா வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|