பதிவு செய்த நாள்
23 மார்2017
06:26
புதுடில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, மொபைல்போன் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் போல்கர், சந்தித்து பேசினார்.அப்போது, அவர், மின்னணு சாதனங்களின் மூளையாக உள்ள, ‘மதர்போர்டு’க்கு விதித்துள்ள, 2 சதவீத வரியால், மொபைல் போன் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு குறித்து கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மொபைல் போன் ஏற்றுமதிக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், வழங்கப்படும் ஊக்கத் தொகையை, 2 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.இதன் மூலம், மொபைல் போன் மற்றும் அதுசார்ந்த உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என, அவர், அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனிடையே, ‘வரும் நிதியாண்டில், மொபைல் போன் உற்பத்திக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 29 கோடி என்ற இலக்கை எட்ட வாய்ப்பில்லை’ என, இந்திய மொபைல்போன் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|