ஒரு வினாடிக்கு ஒரு போன்: இந்தியாவில் ஜியோமி அதிரடிஒரு வினாடிக்கு ஒரு போன்: இந்தியாவில் ஜியோமி அதிரடி ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.40 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.40 ...
சிறப்பான வாடிக்கையாளர் சேவை கொடுத்தால் நிறுவனங்களை கொண்டாடும் இந்தியர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2017
06:29

புதுடில்லி: வாடிக்­கை­யா­ளர் சேவை­யில் சிறந்து விளங்­கும் நிறு­வ­னங்­களின் பொருட்­களை வாங்­கு­வ­தற்கே, இந்­தி­யா­வில் உள்ள, பெரும்­பான்­மை­யான நுகர்­வோர்­கள் ஆர்­வம் காட்­டு­வது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.
அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் குளோ­பல் சர்­வீ­சிங் நெட்­வொர்க் நிறு­வ­னம், இந்­தியா, அமெ­ரிக்கா, கனடா, மெக்­சிகோ, பிரிட்­டன், இத்­தாலி, ஹாங்­காங், ஜப்­பான், சிங்­கப்­பூர் ஆகிய ஒன்­பது நாடு­களில், நுகர்­வோ­ரி­டம் ஆய்வு மேற்­கொண்­டது.
திருப்திஅதன் அடிப்­ப­டை­யில், இந்­தாண்­டின் சர்­வ­தேச வாடிக்­கை­யா­ளர் சேவை அள­வீடு குறித்த ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.அதன் விப­ரம்: இந்­தி­யர்­கள், கொடுக்­கும் பணத்­தின் மதிப்­புக்கு நிக­ரான பொருட்­களை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளையே நாடு­கின்­ற­னர். அதி­லும், வாடிக்­கை­யா­ளர் சேவை­யில், சிறப்­பாக செயல்­படும் நிறு­வ­னங்­க­ளுக்கே முக்­கி­யத்­து­வம் அளிக்­கின்­ற­னர்.அத்­த­கைய நிறு­வ­னங்­களின் பொருட்­களை தொடர்ந்து வாங்­கு­வ­து­டன், வாடிக்­கை­யா­ளர் சேவை­யில் தங்­க­ளுக்கு ஏற்­பட்ட திருப்­தியை, மற்­ற­வர்­க­ளு­டன் பகிர்ந்து கொள்­கின்­ற­னர். இந்­தி­யா­வில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில், 84 சத­வீ­தம் பேர், வாடிக்­கை­யா­ளர் சேவைக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் நிறு­வ­னங்­களின் பொருட்­களை, தொடர்ந்து வாங்­கு­வ­தாக தெரி­வித்து உள்­ள­னர்.
திருப்­தி­யான வாடிக்­கை­யா­ளர் சேவை குறித்து, சமூக வலை­த­ளங்­களில் பகிர்ந்து கொள்­வ­து­டன், அவற்­றின் மூல­மா­கவே, வாடிக்­கை­யா­ளர் சேவை­களை பெறு­வ­தா­க­வும், 64 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர்; இது, மெக்­சிகோ, அமெ­ரிக்கா, ஹாங்­காங், ஜப்­பான் ஆகிய நாடு­களை விட அதி­கம்.வாடிக்­கை­யா­ளர் சேவை­யில், மோச­மான அனு­ப­வத்தை சந்­திக்க நேர்ந்­தால், சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­களின் பொருட்­களை வாங்­கா­மல் புறக்­க­ணிப்­ப­தாக, 63 சத­வீ­தத்­தி­னர் கருத்து தெரி­வித்து உள்­ள­னர்.ஒரு நிறு­வ­னம், மிகச் சிறந்த வாடிக்­கை­யா­ளர் சேவையை வழங்­கி­னால், அந்­நி­று­வ­னத்­தின் பொருட்­க­ளுக்கு, கூடு­தல் விலை கொடுக்­க­வும் தயா­ராக இருப்­ப­தாக, 86 சத­வீ­தம் பேர் கூறி­உள்­ள­னர்.
அக்கறைஇக்­க­ருத்­துக்கு, அமெ­ரிக்­கா­வில், 70; பிரிட்­டன், 59; சிங்­கப்­பூர், 72 மற்­றும் ஜப்­பா­னில், 33 சத­வீ­தம் பேர் ஆத­ரவு தெரி­வித்து உள்­ள­னர். ஒரு நிறு­வ­னத்­தின் வாடிக்­கை­யாளர் சேவை­யில் மகிழ்ச்சி அடை­யும் இந்­தி­யர்­கள், தங்­கள் அனு­ப­வத்தை ஏரா­ள­மா­னோ­ரி­டம் விரும்பி பகிர்ந்து கொள்­கின்­ற­னர். இதில், இந்­தி­யர்­களை விட, பிற நாட்­டி­னர் மிக­வும் பின்­தங்கி உள்­ள­னர். இந்­தி­யா­வில் செயல்­பட்டு வரும் நிறு­வ­னங்­கள், தர­மான பொருட்­களை வழங்க, அதிக அக்­கறை எடுத்­துக் கொள்­கின்றன. அதே அள­வி­லான ஈடு­பாட்டை, வாடிக்­கை­யா­ளர் சேவைக்­கும் வழங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டு உள்­ளது. சிறப்­பான வாடிக்­கை­யா­ளர் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் மட்­டுமே, போட்­டியை சமா­ளித்து, வர்த்­த­கத்தை திறம்­பட மேற்­கொள்ள முடி­யும் என்­பதை, இந்த ஆய்வு வெளிப்­ப­டுத்தி உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)