பதிவு செய்த நாள்
23 மார்2017
15:45
புதுடில்லி : மத்திய அரசின் பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் நகர்புறத்தில் முதல் முறையாக வீடு வாங்கினால், மத்திய அரசே வட்டி மானியம் வழங்குகிறது.
உங்களின் ஆண்டு வருமானம் ரூ.12 முதல் 18 லட்சத்திற்குள் இருந்து, அரசு திட்டத்தின் கீழ் வாங்கினால் மாத தவணை ரூ.2000 வரை குறையும். ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு அரசு 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி மானியம் அளிக்கிறது. இத்திட்டத்திற்கு தேசிய வீட்டுவங்கி, நாடு முழுவதிலும் உள்ள 45 வீட்டு கட்டுமான நிதி நிறுவனங்கள், 15 அரசு வங்கிகள், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட 70 அமைப்புக்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்ககைய்ய நாயுடு கூறுகையில், வரி செலுத்துவதன் மூலம் நடுத்தர வருமான வர்க்கத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்கின்றனர். அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், வங்கிகளையும் மற்ற அமைப்புக்களையும் மக்களுக்கு பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். கணவன் - மனைவி இருவரம் சம்பாதிக்கும் குடும்பங்கள், திருமணமாகாத மகள்கள் மற்றும் மகன்கள் சம்பாதிக்கும் குடும்பங்கள், திருமணமாகாத இளைஞர்கள் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பெற தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|