பதிவு செய்த நாள்
24 மார்2017
13:44
புதுடில்லி : ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி மசோதாக்கள் ஒப்புதல் பெறுவதற்காக பார்லி.,யில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பார்லி.,யில் அடுத்த வாரம் ஜிஎஸ்டி : இதுகுறித்து ஜெட்லி கூறுகையில், ஜிஎஸ்டி அமல்படுத்துவது தொடர்பான 4 மசோதாக்களுக்கு கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை பார்லி.,யில் தாக்கல் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளும் கடந்த 2-3 நாட்களாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் இந்த மசோதாக்கள் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஜிஎஸ்டி.,யில் தேவைப்பட்டால் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்படும். மேலும் 5 சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான சுற்றறிக்கை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மார்ச் 31 நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
ஜிஎஸ்டி துணை சட்ட மசோதாக்ககளான சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு சட்டம் ஆகியவை நேற்று (மார்ச் 23) பார்லி.,யில் தாக்கல் செய்யப்படலாம் என நிதித்துறை இணையமைச்சர் ராம் மேக்வால் கூறி இருந்தார். ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான மசோதாக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அருண்ஜெட்லி உறுதி பட தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|