டிஜிட்டல் பரிவர்த்தனை:கூகுளுடன் அரசு ஒப்பந்தம்டிஜிட்டல் பரிவர்த்தனை:கூகுளுடன் அரசு ஒப்பந்தம் ... பேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வு பேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வு ...
ஜிஎஸ்டி மசோதாக்கள் பார்லியில் அடுத்த வாரம் தாக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
13:44

புதுடில்லி : ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி மசோதாக்கள் ஒப்புதல் பெறுவதற்காக பார்லி.,யில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பார்லி.,யில் அடுத்த வாரம் ஜிஎஸ்டி : இதுகுறித்து ஜெட்லி கூறுகையில், ஜிஎஸ்டி அமல்படுத்துவது தொடர்பான 4 மசோதாக்களுக்கு கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை பார்லி.,யில் தாக்கல் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளும் கடந்த 2-3 நாட்களாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் இந்த மசோதாக்கள் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஜிஎஸ்டி.,யில் தேவைப்பட்டால் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்படும். மேலும் 5 சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான சுற்றறிக்கை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மார்ச் 31 நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
ஜிஎஸ்டி துணை சட்ட மசோதாக்ககளான சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு சட்டம் ஆகியவை நேற்று (மார்ச் 23) பார்லி.,யில் தாக்கல் செய்யப்படலாம் என நிதித்துறை இணையமைச்சர் ராம் மேக்வால் கூறி இருந்தார். ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான மசோதாக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அருண்ஜெட்லி உறுதி பட தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)