பேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வுபேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வு ... ஜப்­பா­னி­ய­ரு­டன் கூட்டு தொழில் தமி­ழக தொழி­ல­தி­பர்­கள்  ஆர்­வம் ஜப்­பா­னி­ய­ரு­டன் கூட்டு தொழில் தமி­ழக தொழி­ல­தி­பர்­கள் ஆர்­வம் ...
பின்னால வருத்தப்படாதீங்க...கறுப்புபண 'முதலை'களுக்கு ஐடி எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
15:15

புதுடில்லி : கறுப்பு பணம் வைத்திருப்போர் அது தொடர்பான தகவலை தானே முன்வந்து அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்பட நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
கவுன்டவுன் துவங்கியது : நாடு முழுவதிலும் உள்ள முன்னணி பத்திரிக்கைகளில் வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கவுன்டவுன் துவங்கி விட்டது. கறுப்பு பணம் வைத்திருப்போர் தங்களின் சட்டவிரோத டெபாசிட்கள் பற்றிய தகவலை 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா' வின் கீழ் மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் அளிக்காவிட்டால் பின்நாளில் வருத்தப்பட வேண்டி இருக்கும்.
உங்களின் கறுப்பு பணம் டெபாசிட் குறித்த விபரங்கள் வருமான வரித்துறையிடம் உள்ளது. கறுப்பு பணம் வைத்திருப்போர் அளிக்கும் சொத்து மற்றும் முதலீடு விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா மூலம் கறுப்பு பணம் விபரங்களை அளிப்பவர்களிடம் 49.9 சதவீதம் வருமான வரி மட்டும் வசூலிக்கப்பட்டும். அப்படி தகவல் ஒப்படைக்காதவர்களிடம் இருந்து வருமான வரியுடன், 77.25 சதவீதம் அபராதமும் வசூலிக்கப்படும்.
சோதனையின் போது கறுப்பு பணம் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 83.25 சதவீதம் முதல் 137.25 சதவீதம் வரை அபராதமும், வரியும் வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கறுப்பு பணம் முதலைகளுக்கு அரசு மார்ச் 31 வரை இறுதி கெடு விதித்திருப்பது தெளிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)