பதிவு செய்த நாள்
25 மார்2017
01:59
புதுடில்லி:பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, லோக்சபாவில், மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கை:கடந்த, 2015 – 16ம் நிதிஆண்டில், 10 பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த இழப்பில், செயில், பி.எஸ்.என்.எல்., – ஏர் இந்தியா ஆகியவை, 51.65 சதவீத பங்களிப்புடன், முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்த பட்டியலில், ஓ.என்.ஜி.சி., விதேஷ், ராஷ்டிரிய இஸ்பட் நிகம், பி.இ.சி., – பி.எச்.இ.எல்., ஆகிய பொதுத் துறை நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.பொதுத் துறையைச் சேர்ந்த, 78 நிறுவனங்கள் சந்தித்த மொத்த இழப்பில், முதல், 10 நிறுவனங்களின் பங்கு, 79.81 சதவீதமாக உள்ளது.
அதிக லாபம் ஈட்டிய, 10 பொதுத் துறை நிறுவனங்களில், முதல் மூன்று இடங்களை, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., – ஐ.ஓ.சி., ஆகியவை பிடித்துள்ளன. இந்த பட்டியலில், இந்துஸ்தான் பெர்டிலைசர் கார்ப்பரேஷன், மகாநதி கோல்பீல்ட்ஸ் ஆகியவை இணைந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|