பதிவு செய்த நாள்
25 மார்2017
02:02
புதுடில்லி:‘வாகனங்களின் விற்பனைக்கு பின் தேவைப்படும் உதிரி பாகங்கள் சந்தை, 2019 – 20ம் நிதியாண்டில், 75,705 கோடி ரூபாயாக உயரும்’ என, ‘அக்மா’ எனப்படும், இந்திய வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
அதன் விபரம்:சந்தையில் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், அவற்றின் தேய்மானத்தை பொறுத்து, உதிரி பாகங்கள் மாற்றப்படுகின்றன. இத்தகைய, உதிரி பாகங்களுக்கான சந்தை, சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டில், இத்தகைய உதிரி பாகங்கள் சந்தையின் மதிப்பு, 56,098 கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆண்டுக்கு, சராசரியாக, 10.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2020 – 21ம் நிதியாண்டில், 75,705 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
வளர்ச்சி
வாகன விற்பனைக்கு பிந்தைய உதிரி பாகங்கள் சந்தையில், தற்போது, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பங்களிப்பு, 12,038 கோடி ரூபாயாக உள்ளது.
பயணிகள் கார், வர்த்தக வாகனம், டிராக்டர் ஆகியவற்றின் பங்களிப்பு, முறையே, 18,970 கோடி ரூபாய், 19,748 கோடி ரூபாய் மற்றும் 5,342 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.வரும், 2026ல், வாகன உற்பத்தி திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு ஏற்ப, வாகன விற்பனைக்கு பிந்தைய உதிரி பாகங்கள் துறை, வளர்ச்சி கண்டு வருகிறது.அதனால், இத்துறையின் சந்தை மதிப்பு, இலக்கு ஆண்டில், 1.79 – 2 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் சந்தையில், தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. எஞ்சிய, 60 சதவீத பங்களிப்பை, தனி நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா துறையினர் வழங்கி வருகின்றனர்.
வர்த்தக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் துறையில், தனி நிறுவனங்களின் தயாரிப்புகள், 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. அதே சமயம், டிராக்டர்களுக்கான உதிரி பாகங்கள் சந்தையில், அமைப்பு சாரா துறையினரின் பங்களிப்பு, 40 சதவீதமாக உள்ளது.
போலீகள்
வாகன உதிரி பாகங்கள் துறையில், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வந்த, போலி உதிரி பாகங்களின் புழக்கம், தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. 2010 – 11ம் நிதியாண்டில், உதிரி பாகங்கள் சந்தையில், போலிகளின் பங்கு, 36 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 5 சதவீதமாக குறைந்துள்ளது.வாகன விற்பனைக்கு பிந்தைய உதிரி பாகங்களின தரத்தை நிர்ணயிக்க, உரிய விதிமுறைகள் தற்போது இல்லை. மக்களின் பாதுகாப்பு தொடர்பான இப்பிரச்னைக்கு, தீர்வு காண்பதற்கான திட்டத்தை உருவாக்குவதில், மத்திய அரசுடன், கூட்டமைப்பு இணைந்து செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|