பதிவு செய்த நாள்
28 மார்2017
02:16
மதுரை : மும்பை தி ஆர்கிட் ஓட்டலில், எதிர்கால கப்பல் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் சுற்றுப்புறவியல் குறித்த, ‘கிரீன் ஷிப்பிங் இந்தியா 2017’ கருத்தரங்கம், ஏப்., 7ல் நடக்கிறது. இதை, லிட்டோரல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நடத்துகிறது.
தொழில்நுட்ப மாற்றங்கள், நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் பிரதிபலிக்கின்றன. தற்போது, கப்பல் துறையிலும் பெரிய அளவில் தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்து வருகின்றன. இத்துறையில், மாற்றங்கள் தேவை என்பதை, மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டுள்ளன. மாற்றங்களை ஏற்று, உத்வேகம் பெற வேண்டிய அவசியம், தொழில் துறைக்கும் ஏற்பட்டுள்ளது. அதற்கு உதவும் வகையில், இக் கருத்தரங்கம் அமையும்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜா வய்ஸ் கூறியதாவது: கப்பல் உரிமையாளர்கள், சுற்றுப்புறச் சூழல் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள், கப்பல் வடிவமைப்பாளர்கள், இன்டர்நேஷனல் மாரிடைம் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்பர். இந்த ஆண்டில், மேலும் இரண்டு கருத்தரங்குகள் நடத்தும் திட்டம் உள்ளது. வரும் செப்., மாதம், கடல் அலைகளில் இருந்து, மின்சாரம் தயாரிப்பது குறித்த கருத்தரங்கம், டில்லியில் நடக்கிறது. கிழக்காசிய பிராந்தியத்தின், கப்பல் தொழில் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கான விருது வழங்குதல், பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கு, டிசம்பரில், துபாயில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|