சரக்கு போக்குவரத்துக்கு தனி பிரிவு ; வர்த்தக அமைச்சகம் திட்டம்சரக்கு போக்குவரத்துக்கு தனி பிரிவு ; வர்த்தக அமைச்சகம் திட்டம் ... 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்வு 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்வு ...
அரசு முயற்சியால் மாறியது மந்த நிலை; விறுவிறு வளர்ச்சியில் தயாரிப்பு துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2017
01:16

மும்பை : ‘மத்­திய அரசு எடுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக, தயா­ரிப்­புத் துறை, மூன்று மாத மந்த நிலைக்கு பின், நடப்பு மார்ச்­சில் விறு­விறு வளர்ச்­சியை கண்­டுள்­ளது’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின் ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்:சீனா­வின் மலிவு விலை உருக்கு பொருட்­கள் இறக்­கு­ம­தி­யால், உள்­நாட்டு உருக்கு துறை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, ஒரு­சில உருக்கு பொருட்­களின் இறக்­கு­ம­திக்கு, பொருள் குவிப்பு தடை வரி விதிக்­கப்­பட்­டது. உருக்கு பொருட்­க­ளுக்கு, குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டது.
இலக்குமேலும், சாலை, ரயில், துறை­மு­கம், ராணு­வம், மின்­சா­ரம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில், அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­கள் முடுக்­கி­வி­டப்­பட்டு உள்ளன.இது, தயா­ரிப்­புத் துறை­யின் வளர்ச்­சிக்கு துணை புரிந்து வரு­கிறது. அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களில், சாலை­கள் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்றன. அத­னால், சாலை வச­தி­களை மேம்­ப­டுத்­தும் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்ளன.
தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யம், தின­மும், 8.2 கி.மீ., வீதம், 3,000 கி.மீ., நெடுஞ்­சாலை திட்­டங்­களை நிறை­வேற்ற இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்­தது. அதில், தின­மும், 6.5 கி.மீ., என்ற அள­வில், 2,350 கி.மீ., நெடுஞ்­சாலை திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்டு உள்ளன. இது, இலக்கை விட குறைவு என்ற போதி­லும், வரும், 2017 – 18ம் நிதி­யாண்­டில், நெடுஞ்­சாலை பணி­கள் வேக­மெ­டுக்­கும்; தின­மும், 15 கி.மீ., வீதம், 5,475 கி.மீ., அள­விற்கு, நெடுஞ்­சா­லை­கள் அமைக்­கப்­படும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. சாலை வச­தி­கள் கார­ண­மாக, சரக்கு போக்­கு­வ­ரத்து விரை­வாக மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. மின் துறை­யி­லும், அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கின்றன.
இதர மண்­ட­லங்­களில் இருந்து, வடக்கு மற்­றும் தெற்கு பிராந்­தி­யங்­க­ளுக்கு மின் வினி­யோ­கம் மேற்­கொள்ள, மின் தொடர் கட்­ட­மைப்பு பணி­கள் மிகப்­பெ­ரிய அள­வில் நடை­பெற்று வரு­கின்றன. இதை, 19வது மின் துறை ஆய்­வ­றிக்கை சுட்­டிக்­காட்டி உள்­ளது.
புத்துயிர்மத்­திய அர­சின் நட­வ­டிக்­கை­களும், அதி­க­ரித்து வரும் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களும், தயா­ரிப்­புத் துறைக்கு புத்­து­யி­ரூட்டி உள்ளன. இத்­து­றை­யின் ஆண்டு வளர்ச்­சியை மதிப்­பி­டும், ‘எஸ்.பி.ஐ., காம்­போ­சிட் இன்­டெக்ஸ்’ மூன்று மாதங்­க­ளுக்கு பின், 50 புள்­ளி­க­ளுக்கு மேல் உயர்ந்து, 50.3 புள்­ளி­க­ளாக அதி­க­ரித்து உள்­ளது. அது போல, மாதாந்­திர குறி­யீ­டும், நடப்பு மார்ச்­சில், 53.3 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது; இது, பிப்­ர­வ­ரி­யில், 49.2 புள்­ளி­க­ளாக குறைந்து இருந்­தது.தயா­ரிப்­புத் துறை­யின் இத்­த­கைய ஏற்­றத்­தால், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, பிப்­ர­வரி, மார்ச்­சில் தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)