ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.64 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.64 ...
அடிப்படை கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:04

புதுடில்லி : மாநில அர­சின் கீழ் உள்ள பொதுத் துறை நிறு­வ­னங்­கள், பெரிய அள­வி­லான அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களை நிறை­வேற்ற, நேர­டி­யாக, வெளி­நாட்டு அரசு அமைப்­பு­க­ளி­டம் இருந்து நிதி­யு­தவி பெறு­வ­தற்­கான, புதிய விதி­முறை அம­லுக்கு வர உள்­ளது. இதற்கு, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.
இதன் மூலம், மாநி­லங்­களில், நிதி பற்­றாக்­கு­றை­யால் செயல்­ப­டுத்த முடி­யா­மல் உள்ள, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, விடிவு காலம் பிறக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.தற்­போ­தையை விதி­மு­றைப்­படி, மாநில அர­சு­களின் கீழ் உள்ள பொதுத் துறை நிறு­வ­னங்­கள், வெளி­நாட்டு அரசு முகமை அமைப்புகளி­டம் இருந்து, நேர­டி­யாக கடன் பெற அனு­ம­தி­யில்லை. இந்த கட்­டுப்­பாடு நீக்­கப்­ப­டும்­பட்­சத்­தில், வலு­வான நிதி­நிலை கொண்ட, மாநில அரசு பொதுத் துறை நிறு­வ­னங்­கள், நேர­டி­யாக, அன்­னிய முகமை அமைப்­பு­க­ளி­டம் கடன் பெற்று, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேற்­கொள்­ள­லாம்.
மாநில அரசை சார்ந்­தி­ரா­மல், வட்­டி­யு­டன், கடன் தவ­ணையை முகமை அமைப்­பு­க­ளுக்கு, நேர­டி­யாக செலுத்­த­லாம்.இந்த திட்­டத்­தால், மாநில அர­சு­களின் நிதிச் சுமை­யும் குறைக்­கும். அன்­னிய முகமை அமைப்­பு­க­ளி­டம், மாநில பொதுத் துறை நிறு­வ­னங்­கள் பெறும் கட­னுக்கு, மத்­திய, மாநில அர­சு­கள் உத்­த­ர­வா­தம் வழங்­கும். ஒரு மாநி­லத்­தின் மொத்த உற்­பத்தியில், 3 சத­வீ­தம் வரை­யி­லான நிதி பற்­றாக்­கு­றையை சமா­ளிக்க, அரசு கடன் பெற­லாம்.
இந்த வரம்பை தாண்­டிய மாநில அர­சு­க­ளுக்கு, அன்­னிய கடன் பெற அனு­மதி கிடை­யாது. இதன் கார­ண­மா­கவே, நிதி பற்­றாக்­குறை அதி­க­மாக உள்ள பல மாநி­லங்­களில், அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களை விரைந்து நிறை­வேற்ற முடி­யாத நிலை உள்­ளது. இந்த பிரச்­னைக்கு, புதிய விதி­முறை தீர்­வ­ளிக்­கும். மேலும், 14வது நிதிக் குழு, சில நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யில்,மாநி­லங்­கள் கூடு­த­லாக, 0.50 சத­வீதம் கடன் பெற அனு­ம­திக்­க­லாம் என, தெரி­வித்­துள்­ளது. இந்த கூடு­தல் வரம்பு, மாநில அர­சின் கீழ் உள்ள நிறு­வ­னங்­கள், அன்­னிய நிதி­யு­த­வியை பயன்­ப­டுத்தி, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­களை நிறை­வேற்­றிக் கொள்ள உத­வும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
அடுத்த 5 ஆண்­டு­களில்..சாலை, துறை­மு­கம், விமான நிலை­யம் உள்­ளிட்ட, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 43 லட்­சம் கோடி ரூபாய் தேவைப்­படும். இதில், 70 சத­வீ­தம், மின்­சா­ரம், சாலை­கள் மற்­றும் நகர்ப்­புற மேம்­பாட்­டிற்கு செல­வா­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)