பதிவு செய்த நாள்
23 ஏப்2017
06:39
பெங்களூரு : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூரில், காபி வாரியத்தின் வலைதளத்தை அறிமுகப்படுத்தி, நிலவள ஆய்வு அட்டையின் வினியோகத்தை துவக்கி வைத்து பேசியதாவது:தற்போது, ‘பிராண்டு’ பொருட்களின் யுகம். சாதாரண பொருட்களை கூட, பிராண்டு பெயரில் விற்பனை செய்தால் தான், சந்தையில் போட்டியை தாக்குப் பிடித்து, வளர்ச்சி காண முடியும்.அதனால், காபி வாரியம், நாட்டில் விளையும் காபி வகைகளை, பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்த வேண்டும். கம்போடியா, வியட்நாம், மியான்மர் போன்ற நாடுகள், காபியை, ‘பேக்’ செய்வது முதல், சந்தைப்படுத்துவது வரை, அதன் மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றன.ஆந்திராவில், பழங்குடியினர் வசிக்கும் அரக்கு பகுதியில், முதன்முறையாக காபி விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் காபிக்கு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ‘அரக்கு காபி’ என்ற தனி விற்பனை மையம் உள்ளது.அது போல, காபி வாரியம், ‘கூர்க்’ பகுதியில் விளையும் காபியை, சந்தைப்படுத்தலாமே. காபி வாரியம், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|