பதிவு செய்த நாள்
24 ஏப்2017
04:17
வங்கிகளும், நிதி நுட்ப நிறுவனங்களும் உடனடி கடன் வசதி மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வரும் நிலையில், பல்வேறு அம்சங்களை பரிசீலித்தப் பிறகே முடிவெடுக்க வேண்டும்.
வீட்டுக் கடன், வாகனக் கடன் வரிசையில் இப்போது உடனடி கடன்களும் சேர்ந்திருக்கின்றன. பல்வேறு வங்கிகள் உடனடி கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளன. வழக்கமான கடன்கள் போல அல்லாமல் இவை உடனடியாக வழங்கப்படுவதாக சொல்லப்படுவதை குறிக்கும் வகையில், ‘இன்ஸ்டண்ட் லோன்ஸ் மற்றும் குவிக் லோன்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இவை, ‘பிரீ அப்ருவ்டு லோன்ஸ்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட கடன்கள் என்று பொருள். பொதுவாக இந்த வகை கடன் பெற, அதிக அளவில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை மற்றும் கடனுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்றும் கருதப்படுகிறது. வங்கிகள் மட்டும் அல்லாமல், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நுட்ப நிறுவனங்கள் ஆகியவையும், இந்த வகை கடன்களை வழங்குகின்றன. சக மனிதர்களிடம் இருந்து கடன் பெற உதவும் இணையதள நிறுவனங்களும், இந்த வகை கடன்களை வழங்குகின்றன. இணையதளம் அல்லது செயலி மூலம் இவற்றை பெற வேண்டும்.
தொழில்நுட்ப விளைவுவங்கிகள் உடனடி கடன் வினியோகத்தில் ஆர்வம் காட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வர்த்தக நிறுவன கடன் பிரிவில் வாரா கடன் சிக்கல் பெரும் பிரச்னையாக இருப்பதால், வங்கிகள் சில்லரை பிரிவிலான கடனில் அதிக கவனம் செலுத்துகின்றன. மேலும், தொழில்நுட்ப வசதிகளின் காரணமாக வாடிக்கையாளர்கள் கடன் தகுதியை தீர்மானிப்பது, விண்ணப்பங்களை பரிசீலிப்பது ஆகியவற்றை விரைவாக மேற்கொள்ள முடிகிறது. இந்த பிரிவில், ‘பின் டெக்’ எனப்படும் நிதி நுட்ப நிறுவனங்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. செயலி மூலமே கடன் அளிக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களும் அறிமுகமாகியுள்ளன.உடனடி கடன்கள் தனிப்பட்ட தேவைக்காகவும், வர்த்தக தேவைக்காகவும் அளிக்கப்படுகின்றன. இவற்றின் வரம்பும் சில ஆயிரம் முதல் சில லட்சம் வரை இருக்கின்றன. அவசரத் தேவைக்கு இவை கைகொடுப்பதாக நினைக்கலாம். ஆனால், எளிதாக கிடைக்கும் காரணத்தால் மட்டுமே இந்த வகை கடன்களை பெறுவதில் ஆர்வம் காட்டக்கூடாது என, நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தனிநபர் கடன்உடனடி கடன்கள் என சொல்லப்படுபவை பெரும்பாலும் தனிநபர் கடன் தான். இவற்றுக்கு குறைந்தபட்ச ஆவணங்களே தேவை. ஆனால், பல நேரங்களில் வங்கிகள் கடனுக்கான அனுமதியை உடனடியாக வழங்குகின்றனவே தவிர கடனை அல்ல. பெரும்பாலும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு தான் இந்த வகை கடன்கள் வழங்க வங்கிகள் முன்வருகின்றன. வாடிக்கையாளர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அவர்களின் கடன் தகுதி அறிவதற்கான வாய்ப்புகளும் வங்கி வசம் இருப்பதால் கடன் அளிக்க முன்வருகின்றன. வங்கியின் இணையதளம் அல்லது செயலி மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு முன் கடனுக்கான அனுமதி பெற்று இருக்க வேண்டும். செயலி அல்லது இணைய வங்கி சேவை பக்கத்தில் இந்த அனுமதி வழங்கப்படும்.முன் அனுமதி பெற்றிருந்தாலும் அடிப்படை விபரங்கள் மற்றும் பான் கார்டு தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அவை பொருத்தமாக இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும்.
நிதி நுட்ப நிறுவனங்கள்வங்கிகள் தவிர வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இவற்றுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்கள் மற்றும் சக மனிதர்களிடையே கடன் பெற வழி செய்யும் இணையதளங்கள் ஆகியவையும் உடனடி கடன் அளிக்கின்றன. ‘பின் டெக்’ நிறுவனங்கள் என குறிப்பிடப்படும் இவற்றில், சில செயலிகள் மூலமும் கடன் அளிக்கின்றன. வாடிக்கையாளர்களின் நிலைக்கேற்ப இவை உடனடியாக கடன் அளிக்கின்றன. இவை குறுகிய கால கடன்களும் அளிக்கின்றன. இவற்றின் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கலாம்.இந்த வகை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் சமூக தள செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கடன் தகுதியை தீர்மானிக்கின்றன. எனவே இவை இதற்கான அனுமதியை கோரலாம். தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு இந்த வசதி ஏற்றதாக இருக்காது. எல்லாவற்றுக்கும் மேல், இவற்றின் வட்டி விகிதம், செயல்முறை கட்டணம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடனடி கடனில் கவனிக்க வேண்டியவை:* தனிநபர் கடன்கள் பெற எளிதானவை. ஆனால், வட்டி அதிகம் கொண்டவை.* செயல்முறை கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் உண்டு.* வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.* திரும்பிச் செலுத்தும் ஆற்றல் பற்றி யோசிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|