தங்­க­மான முத­லீடுதங்­க­மான முத­லீடு ... காலாண்டு முடிவுகள்: ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி காலாண்டு முடிவுகள்: ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விரைவு, உட­னடி கடன்கள் உங்­க­ளுக்கு ஏற்­ற­வையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
04:17

வங்­கி­களும், நிதி நுட்ப நிறு­வ­னங்­களும் உட­னடி கடன் வசதி மூலம் வாடிக்­கை­யா­ளர்­களை கவர்ந்­தி­ழுத்து வரும் நிலையில், பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லித்தப் பிறகே முடி­வெ­டுக்க வேண்டும்.
வீட்டுக் கடன், வாகனக் கடன் வரி­சையில் இப்­போது உட­னடி கடன்­களும் சேர்ந்­தி­ருக்­கின்­றன. பல்­வேறு வங்­கிகள் உட­னடி கடன் வச­தியை அறி­முகம் செய்­துள்­ளன. வழக்­க­மான கடன்கள் போல அல்­லாமல் இவை உட­ன­டி­யாக வழங்­கப்­ப­டு­வ­தாக சொல்­லப்­ப­டு­வதை குறிக்கும் வகையில், ‘இன்ஸ்டண்ட் லோன்ஸ் மற்றும் குவிக் லோன்ஸ்’ என்று குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இவை, ‘பிரீ அப்­ருவ்டு லோன்ஸ்’ என்றும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. அதா­வது முன்­கூட்­டியே அனு­ம­திக்­கப்­பட்ட கடன்கள் என்று பொருள். பொது­வாக இந்த வகை கடன் பெற, அதிக அளவில் ஆவ­ணங்­களை சமர்ப்­பிக்க வேண்­டி­ய­தில்லை மற்றும் கட­னுக்­காக காத்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்றும் கரு­தப்­ப­டு­கி­றது. வங்­கிகள் மட்டும் அல்­லாமல், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள், நிதி நுட்ப நிறு­வ­னங்கள் ஆகி­ய­வையும், இந்த வகை கடன்­களை வழங்­கு­கின்­றன. சக மனி­தர்­க­ளிடம் இருந்து கடன் பெற உதவும் இணை­ய­தள நிறு­வ­னங்­களும், இந்த வகை கடன்­களை வழங்­கு­கின்­றன. இணை­ய­தளம் அல்­லது செயலி மூலம் இவற்றை பெற வேண்டும்.
தொழில்­நுட்ப விளைவுவங்­கிகள் உட­னடி கடன் வினி­யோ­கத்தில் ஆர்வம் காட்ட பல்­வேறு கார­ணங்கள் இருக்­கின்­றன. வர்த்­தக நிறு­வன கடன் பிரிவில் வாரா கடன் சிக்கல் பெரும் பிரச்­னை­யாக இருப்­பதால், வங்­கிகள் சில்­லரை பிரி­வி­லான கடனில் அதிக கவனம் செலுத்­து­கின்­றன. மேலும், தொழில்­நுட்ப வச­தி­களின் கார­ண­மாக வாடிக்­கை­யாளர்கள் கடன் தகு­தியை தீர்­மா­னிப்­பது, விண்­ணப்­பங்­களை பரி­சீ­லிப்­பது ஆகி­ய­வற்றை விரை­வாக மேற்­கொள்ள முடி­கி­றது. இந்த பிரிவில், ‘பின் டெக்’ எனப்­படும் நிதி நுட்ப நிறு­வ­னங்­களும் சுறு­சு­றுப்­பாக இயங்கி வரு­கின்­றன. செயலி மூலமே கடன் அளிக்கும் சேவை வழங்கும் நிறு­வ­னங்­களும் அறி­மு­க­மா­கி­யுள்­ளன.உட­னடி கடன்கள் தனிப்­பட்ட தேவைக்­கா­கவும், வர்த்­தக தேவைக்­கா­கவும் அளிக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றின் வரம்பும் சில ஆயிரம் முதல் சில லட்சம் வரை இருக்­கின்­றன. அவ­சரத் தேவைக்கு இவை கைகொ­டுப்­ப­தாக நினைக்­கலாம். ஆனால், எளி­தாக கிடைக்கும் கார­ணத்தால் மட்­டுமே இந்த வகை கடன்­களை பெறு­வதில் ஆர்வம் காட்­டக்­கூ­டாது என, நிதி வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர்.
தனி­நபர் கடன்உட­னடி கடன்கள் என சொல்­லப்­ப­டு­பவை பெரும்­பாலும் தனி­நபர் கடன் தான். இவற்­றுக்கு குறைந்­த­பட்ச ஆவ­ணங்­களே தேவை. ஆனால், பல நேரங்­களில் வங்­கிகள் கட­னுக்­கான அனு­ம­தியை உடனடியாக வழங்­கு­கின்­ற­னவே தவிர கடனை அல்ல. பெரும்­பாலும் ஏற்­க­னவே உள்ள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தான் இந்த வகை கடன்கள் வழங்க வங்­கிகள் முன்வரு­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்கள் தொடர்­பான விப­ரங்கள் மற்றும் அவர்­களின் கடன் தகுதி அறி­வ­தற்­கான வாய்ப்­பு­களும் வங்கி வசம் இருப்­பதால் கடன் அளிக்க முன்­வ­ரு­கின்­றன. வங்­கியின் இணை­ய­தளம் அல்­லது செயலி மூலம் இதற்கு விண்­ணப்­பிக்­கலாம். அதற்கு முன் கட­னுக்­கான அனு­மதி பெற்று இ­ருக்க வேண்டும். செயலி அல்­லது இணைய வங்கி சேவை பக்­கத்தில் இந்த அனு­மதி வழங்­கப்­படும்.முன் அனு­மதி பெற்­றி­ருந்­தாலும் அடிப்­படை விப­ரங்கள் மற்றும் பான் கார்டு தக­வல்­களை சமர்­ப்பிக்க வேண்டும். அவை பொருத்­த­மாக இருந்தால் மட்­டுமே கடன் வழங்­கப்­படும்.
நிதி நுட்ப நிறு­வ­னங்கள்வங்­கிகள் தவிர வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள், இவற்­றுடன் இணைந்து செயல்­படும் நிறு­வ­னங்கள் மற்றும் சக மனி­தர்­க­ளி­டையே கடன் பெற வழி செய்யும் இணை­ய­த­ளங்கள் ஆகி­ய­வையும் உட­னடி கடன் அளிக்­கின்­றன. ‘பின் டெக்’ நிறு­வ­னங்கள் என குறிப்­பி­டப்­படும் இவற்றில், சில செய­லிகள் மூலமும் கடன் அளிக்­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்­களின் நிலைக்­கேற்ப இவை உட­ன­டி­யாக கடன் அளிக்­கின்­றன. இவை குறு­கிய கால கடன்­களும் அளிக்­கின்­றன. இவற்றின் வட்டி விகி­தமும் அதி­க­மாக இருக்­கலாம்.இந்த வகை நிறு­வ­னங்கள் வாடிக்­கை­யா­ளர்­களின் சமூக தள செயல்­பா­டு­க­ளையும் கணக்கில் எடுத்­துக்­ கொண்டு கடன் தகு­தியை தீர்­மா­னிக்­கின்­றன. எனவே இவை இதற்­கான அனு­ம­தியை கோரலாம். தனிப்­பட்ட தக­வல்­களை பகிர்ந்து கொள்ள விரும்­பா­த­வர்­க­ளுக்கு இந்த வசதி ஏற்­ற­தாக இருக்­காது. எல்­லா­வற்­றுக்கும் மேல், இவற்றின் வட்டி விகிதம், செயல்­முறை கட்­டணம் போன்­ற­வற்­றையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.
உட­னடி கடனில் கவ­னிக்க வேண்­டி­யவை:* தனி­நபர் கடன்கள் பெற எளி­தா­னவை. ஆனால், வட்டி அதிகம் கொண்­டவை.* செயல்­முறை கட்­டணம், முன்­கூட்­டியே செலுத்தும் கட்­டணம் உண்டு.* வட்டி விகி­தத்தை ஒப்­பிட்டு பார்க்க வேண்டும்.* திரும்பிச் செலுத்தும் ஆற்றல் பற்றி யோசிக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)