பதிவு செய்த நாள்
27 ஏப்2017
00:43
புதுடில்லி : ‘டிவி’ நிகழ்ச்சிகளை, இணைய வசதி மூலம், ‘லேப் – டாப், டெஸ்க் டாப், மொபைல் போன்’ போன்ற சாதனங்களில் காண்பது அதிகரித்திருப்பது, அசெஞ்சர் இந்தியா நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் ஊடக பிரிவின் நிர்வாக இயக்குனர் ஆதித்ய சவுத்ரி கூறியதாவது: ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், அவற்றின் நிகழ்ச்சிகளை, ‘டிவி’யில் மட்டுமின்றி, இணையத்திலும் வெளியிடுகின்றன. படங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை, விரும்பும் நேரத்தில் பார்க்கும், ‘வீடியோ ஆன் டிமாண்ட்’ உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகின்றன. இத்தகைய கூடுதல் சேவைகளை, இந்தியா மற்றும் உலகளவில் உள்ள பொழுது போக்கு நிறுவனங்கள், கடந்த ஓராண்டாக அதிகளவில் வழங்கி வருகின்றன. இதற்கு, இணைய இணைப்புகள் பரவலாகி வருவது, முக்கிய காரணம் எனலாம்.
மக்களிடம், ‘டிவி’யில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் ஆர்வம் குறைந்து, அவற்றை, லேப் – டாப், டெஸ்க் டாப், மொபைல் போன் போன்றவற்றில் பார்ப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆய்வில், 52 சதவீதம் பேர், ‘டிவி’யில் நிகழ்ச்சிகளை பார்ப்பதாக தெரிவித்திருந்தனர். இது, இந்தாண்டு, 23 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலத்தில், லேப் – டாப் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில், ‘டிவி’ நிகழ்ச்சிகளை காண்போரின் பங்கு, 32 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், ‘டிவி’யில் நிகழ்ச்சி களை பார்ப்பது, 47 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அமெரிக்காவில், 59 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாகவும், பிரிட்டனில், 56 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|