பதிவு செய்த நாள்
27 ஏப்2017
00:45
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, மட்டெல் டாய்ஸ் நிறுவனம், அதன், உலக புகழ் பெற்ற, ‘பார்பி’ உள்ளிட்ட பொம்மைகளை, ஆன்லைனில் விற்பனை செய்ய, ‘அமேசான், பிளிப்கார்ட்’ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
இது குறித்து, மட்டெல் டாய்ஸ் இந்திய பிரிவின் மேலாளர் இஷ்மித் சிங் கூறியதாவது: மின்னணு வணிகத்தின் மூலம், இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை, ஆன்லைனில் வாங்கக் கூடிய வகையில், முன்னணி வலைதள நிறுவனங்களான, அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மிக எளிதில் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கலாம். ‘பார்பி, ஹாட்வீல்ஸ், பிஷர் பிரைஸ்’ பொம்மைகளுக்காக, அமேசான், பிளிப்கார்ட் வலைதளங்களில், தனி பிரிவு ஏற்படுத்தப்படும். நிறுவனம், இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மின்னணு வணிகத்தை விரிவுபடுத்துவதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|