பதிவு செய்த நாள்
27 ஏப்2017
15:36
புதுடில்லி : மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த செலவில் விமான சேவை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
மிகக் குறைந்த கட்டணத்தினாலான இந்த விமான சேவை சிம்லா மற்றும் டில்லி இடையே நாளை துவங்கப்பட உள்ளது. உதான் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சிம்லா - டில்லி இடையேயான விமான கட்டணம் ரூ.2000 மட்டுமே. உதான் திட்டத்தின் கீழ் கடப்பா - ஐதராபாத் மற்றும் நாண்டட் - ஐதராபாத் இடையேயான விமான சேவையையும் பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.
19 முதல் 78 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானத்தில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு, ஒரு மணிநேரத்திற்கு ரூ.2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் வரையிலான பயணம் மற்றும் 500 கி.மீ., வரையிலான பயணத்திற்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில குறிப்பிட்ட விமானசேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாமானிய மக்களும் இனி விமான பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|